கூழல் 2 இணைய தொடரின் முதல் பாகம், முதல் எபிசோட் ஆரம்பம் முதலே சுவாரசியம் குறையாம கொண்டுபோய் ஒரு சூப்பர் ட்விஸ்ட்டேட வெளியாகி வரவேற்பு பெற்றநிலையில் அதன் தொடர்ச்சியாக சுழல் 2 உருவாகி உள்ளது. இரண்டாவது சீசனும் காளிப்பட்டினத்தின் வருடாந்திர அஷ்டகாளி விழாவின் பின்னணியைக் கொண்டுள்ளது. நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த தன் சொந்த சித்தப்பாவை கொலை செய்ததற்காக சிறைக்கு செல்கிறார். சிறையில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ளும் போது தனது கடந்த காலத்துடன் போராடுகிறார். நந்தினியின் நண்பரான சப்-இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) அவருக்கு வாதாடுவதற்காக பிரபல வழக்கறிஞர் செல்லப்பா (லால்), உதவியை நாடுகிறார். போர்ட்டில் வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், வழக்கறிஞர் செல்லப்பா தனது தனிப்பட்ட கெஸட் ஹவுசில் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையின் சர்வீஸ் ரிவால்வரை நந்தினி கொலை செய்ய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதால் சக்கரை விசாரணையில் இருந்தாலும், இந்த கொலை வழக்கை விசாரிக்க அவரிடம் ஒப்படைக்கபடுகிறது. அவருக்கு ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையை வெறுக்கும் இன்ஸ்பெக்டர் மூர்த்தி (சரவணன்) ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உயர் அதிகாரி கூறகிறார்.இந்த கொலை வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் சக்கரை தலைமை தாங்கி விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது கெஸட் ஹவுசில் உள்ள கப்போட்டில் முத்து (கௌரி கிஷன்) கைதுப்பாக்கியுடன் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது, சக்கரை மற்றும் குழுவினரால் முத்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்கிறார். விசாரணையின் போது சரியான துப்பு கிடைக்காததால் அனைவரும் மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்டனர். மேலும் கதைக்களம் விரிவடையும் போது வௌ;வேறு ஊர்களில் இருந்து ஏழு பெண்கள் சம்யுக்தா விஸ்வநாதன் (நாச்சி), மோனிஷா ப்ளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷிரிஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம் போஸ்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) கொலையாளி என்று கூறி வருகிறார்கள். கதைக்களம் விரிவடையும் போது இந்த கொலைக்கும் 8 இளம்பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. இந்த எட்டு எபண்களும் நந்தினி இருக்கும் அதே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு இவர்களுக்கு என்ன நடக்pறது? அந்த எட்டு இளம்பெண்கள் யார்? வழக்கறிஞர் செல்லப்பாவுக்கும் அந்த எட்டு பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே மீதிக்கதை.