மம்மட்டியான் ஸ்டார்ஸ் ஜீ 5 வெப் தொடர் விமர்சனம்:

எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் தொடரை ஜீ5 தளத்திற்காக ஆறு எபிசோடுகளாக இயக்கியுள்ளார் சவிர் சுதாகர். நட்பு, உணர்வுகள், சாகசம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஒன்றிணையும் மறக்க முடியாத பயணமான மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ஜீ5-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இதில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட ​பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு மற்றும் தமிழ்செல்வன் கலை இயக்கத்தில் உருவாகியுள்ளது.

ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள் ஒரு பெண் அடங்கிய நான்கு நெருங்கிய நண்பர்கள், தங்களின் கிரிக்கெட் ஹீரோவான எம்எஸ்ஆர் இன் கடைசி சர்வதேசப் போட்டியை சென்னையில் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு இருக்கிறார்கள்.இதற்காக டிக்கெட் வாங்க அவர்கள் கையில் பணம் இல்லை. அந்தப் பணத்தைச் சேர்க்க ஒரு உள்@ர் ‘கல்லி கிரிக்கெட்’ தொடரில் பங்கேற்றுப் பரிசுத் தொகையை வெல்லத் திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் இவர்களின் திட்டத்தை மாற்றுகிறது. இரண்டாவதாக வெற்றி பெற்றும் பணம் கைக்கு கிடைக்காத விரக்தியில் இரவில் பணம் வைத்திருக்கும் விளையாட்டு மைதான அறையில் தங்களுக்கு சேர வேண்டிய பரிசுத் தொகை 30 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு ஊரை விட்டு ஒடி பஸ்ஸைப் பிடித்து சென்னை நோக்கிய இவர்களின் பயணம் தொடங்குகிறது. சென்னைக்கு வந்தவுடன், அவர்கள் முற்றிலும் நம்பிய ஒரு நபரால் டிக்கெட் பெற்றாலும் அங்கு வரும் ஏமாற்று பேர்வழிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். பணத்தையும், அவர்கள் ஆசையாக வாங்கவிருந்த மேட்ச் டிக்கெட்டுகளையும் இழந்த பின் கையில் பணம் இல்லாமல், டிக்கெட்டும் இல்லாமல் தவிக்கும் இந்த நான்கு நண்பர்களும், ஹாஸ்டல் வார்டனின் ஆசை வார்த்தைகளால் உள்@ர் கிரிக்கெட் பெட்டிங் மற்றும் பிக்சிங் செய்யும் மாஃபியா கும்பலிடம் பணத்திற்காக விளையாட செல்ல மாட்டிக் கொள்கிறார்கள். இந்த நண்பர்களின் ‘கல்லி கிரிக்கெட் ‘திறமையைப் பார்த்த அந்த கும்பல், இவர்களை மிரட்டி சட்டவிரோதமான பணயம் வைக்கும் கிரிக்கெட் சூதாட்டப் போட்டிகளில் வலுக்கட்டாயமாக விளையாட வைக்கிறது. இந்த நான்கு நண்பர்களும் அந்தப் பாதாள உலக சூதாட்டக் கும்பலிடமிருந்து தப்பித்து, தங்களின் கனவை நிறைவேற்றினார்களா என்பதே கதையின் முக்கிய திருப்பம். வெறும் சாதாரண பயணமாக இல்லாமல் நட்பு, எமோஷன் மற்றும் சில ஆபத்தான திருப்பங்கள் நிறைந்த ஒரு சாகசப் பயணமாக மாறுகிறது. இறுதியில் அவர்கள் தங்களது ஹீரோவின் ஆட்டத்தைக் கண்டார்களா, இவர்களது நட்பு என்னவானது என்பதே இந்த 6 எபிசோடுகள் கொண்ட சீரிஸின் கதை.

வைபவ் முருகேசன் கதையின் நாயகனாக சின்னா பாத்திரத்தில் வரும் வைபவ், ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகனின் துடிப்பையும், நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணத்தையும் எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். சென்னைக்கு வந்தவுடன் துரோகத்தால் ஒட்டுமொத்தப் பணத்தையும் இழந்து தவிக்கும் போது காட்டும் ஏமாற்றமும், பின்னர் பெட்டிங் சூதாட்டத்தில் வேறு வழியின்றித் தனது கிரிக்கெட் திறமையைக் காட்டும் அதிரடியும் மிக அருமை.

லாவண்யா அன்பழகன் சாரு என்ற கதாபாத்திரமாக வரும் இவர், உணர்ச்சிகரமான மற்றும் நட்பு சார்ந்த காட்சிகளில் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்.இந்த நான்கு பேர் கொண்ட குழுவில் எமோஷனல் பலமாக இருக்கும் கதாபாத்திரம். மாஃபியா கும்பலின் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் நண்பர்களுக்குத் துணையாக நிற்கும் இடங்களில் நல்ல முதிர்ச்சியான நடிப்பு.

வெங்கட பாலமுரளி மற்றும் ஜகாபர் சாதிக் சின்னாவின் நண்பர்களாக வரும் இவர்களின் டைமிங் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த இருவரின் நடிப்பு சீரிஸின் நகர்வுக்குப் பெரிய பலம். கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் எப்படிச் சென்னையின் சூதாட்டக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை தங்களின் எதார்த்தமான உடல்மொழியால் கடத்தியுள்ளனர்.

விவேக் பிரசன்னா மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அனுபவம் வாய்ந்த இவர்களது நடிப்பு சீரிஸ{க்கு ஆங்காங்கே நல்ல சுவாரசியத்தையும், நகைச்சுவையையும் சேர்க்கிறது. குறிப்பாக, ராஜேந்திரனின் வழக்கமான மேனரிசங்கள் ரசிக்க வைக்கின்றன.

சூதாட்ட மன்னன் சேட்டுவாக சம்பத் ராம் மற்றும் சரத் ரவி கதையின் முக்கியத் திருப்பங்களில் வந்து தங்களின் முத்திரையைப் பதிக்கிறார்கள்.

இசை: பரத் தனசேகர் பின்னணி இசை சீரிஸின் முக்கிய பலம். அந்த கல்லி கிரிக்கெட் பந்தயங்களின் போதும், பயணத்தின் விறுவிறுப்பான காட்சிகளின் போதும் இவருடைய இசை திரையோடு ஒன்ற வைக்கிறது.

ஒளிப்பதிவு: பி.எம். ராஜ்குமார் கிராமத்தின் எதார்த்த அழகையும், கிரிக்கெட் விளையாட்டின் போது பந்து நகரும் வேகத்தையும், சென்னை மாநகரத்தின் பரபரப்பையும் கிரிக்கெட் சூதாட்ட உலகத்தையும் தனது கேமராவில் அழகாகக் கடத்தியுள்ளார்.

எடிட்டிங்: பவித்ரன் கே 6 எபிசோடுகளின் நீளத்தையும் எங்கும் தொய்வு ஏற்படாதவாறு நேர்த்தியாக எடிட் செய்துள்ளார்.

தங்கள் கிரிக்கெட் ஹீரோவை பார்க்க சென்னை வந்து, துரோகத்தால் ஒட்டுமொத்த பணத்தையும் இழந்து தவிக்கும் நான்கு கிராமத்து நண்பர்களின் கதையே இந்தத் தொடர்.வழியின்றி சென்னையின் ஆபத்தான பாதாள உலக கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் சிக்கி, அவர்கள் உயிருக்காக விளையாடும் விறுவிறுப்பான சர்வைவல் த்ரில்லரே ‘மம்பட்டியான் ஸ்டார்ஸ்’.இயக்குனர் சவிர் சுதாகர் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்காமல் எமோஷனாகப் பார்க்கும் இந்திய ரசிகர்களின் நாடித் துடிப்பை இயக்குனர் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். ஒரு கிராமத்துப் பின்னணியில் தொடங்கி சென்னை நோக்கிய அந்த அட்வென்ச்சர் பயணத்தை சுவாரசியமான திரைக்கதையோடு கொண்டு சேர்த்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் கனெக்ட் ஆகலாம் சில இடங்களில் வரும் வழக்கமான எமோஷனல் காட்சிகள் நடிகர்களின் எதார்த்தமான நட்பு என்று செல்ல முதல் 2 எபிசோடுகள் மெதுவாக நகர்வது போன்ற உணர்ம் ஏற்படுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதி எமோஷனலாகவும், இரண்டாம் பாதி சென்னை பின்னணியில் நடக்கும் இந்த கிரிக்கெட் பெட்டிங் சவால்களுடனும் விறுவிறுப்பாக நகர்வதே வெப் தொடரின் சிறப்பம்சம்.இந்த வெப் சீரிஸ் கிரிக்கெட் மீதான தீராக் காதலையும், தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஒரு ‘ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் டிராமா’ ஆகும். மம்பட்டியான் ஸ்டார்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ‘ஃப்ரெண்ட்ஷிப்-ரோட் ட்ரிப்’ கதைகளை விரும்புபவர்களுக்கும் ஜீ5 தளத்தில் இந்த வார இறுதியில் பார்க்கக்கூடிய ஒரு நல்ல எண்டர்டெய்னர்.

மொத்தத்தில் எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ் ஜீ5 வெப் தொடர் டிக்கெட்டைத் தேடிய கிரிக்கெட் பயணம், பெட்டிங்கில் முடிந்த நாக் அவுட் சதுரங்க ஆட்டம்!

#mammatiyaan stars
Comments (0)
Add Comment