அங்கீகாரம் சினிமா விமர்சனம் :

கே.ஜெ.ஆர் – ஆதிரன்
விஜி வெங்கடேஷ் – ஆண்டாள் (அட்வகேட் ஜெனரல்​)
இசபெல்லா – செல்வி (நாயகனின் சகோதரி)
வசுந்தரா – பயிற்சியாளர் ருத்ரா
சிந்தூரி – சத்யா
அஜித் கோஷி – மனோஜ்
ரமா – பானுமதி
ரங்கராஜ் பாண்டே – நீதிபதி
மன்சூர் அலிகான் – அமைச்சர்
செல்விஇ ஜானகிஇ ராம்ஜிஇ அருள் டி. சங்கர்இ கார்த்திக்இ அந்தோணிஇ ஷான் விமல்குமார் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
வழங்குபவர் – ஸ்வஸ்திக் விஷன்ஸ்
தயாரிப்பாளர்கள் – எஸ்.கே.பிரசாந்த்இ அஜித் பாஸ்கர்இ அருண் முருகன்
இயக்கம் – தென்பாதியான்
இசை – ஜிப்ரான் வைபோதா
சண்டைப் பயிற்சி – பீட்டர் ஹெய்ன்
ஒளிப்பதிவு – ஏ. விஸ்வநாத்
படத்தொகுப்பு – தினேஷ் குமார்
கலை இயக்கம் – ராமு தங்கராஜ்
ஒலி வடிவமைப்பு – சம்பத் ஆழ்வார்
நடன அமைப்பு – ஷெரீசூஃப்
விளம்பர வடிவமைப்பு – பிரதூல் என்.டி.
கிரியேட்டிவ் ப்ரொமோஷன்ஸ் – பீட்ரூட்
நிர்வாகத் தயாரிப்பாளர் – ஸ்பூர்த்தி கேதினேனி
மக்கள் தொடர்பு – யுவராஜ்

அங்கீகாரம் ஒரு சமூக-விளையாட்டு நீதிமன்ற நாடகம்; அங்கீகாரம் தேடி போராடும் ஒரு வீரனின் வலிஇ அரசு- அமைப்பு சிக்கல்கள்இ மற்றும் ஒரு பொதுமகன் வெற்றிக்காகச் செலுத்தும் விலையை மையமாக வைத்து அட்டகாசமாக பேசும் படம்.
தூய்மைப் பணியாளராக வேலை செய்து தனது குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தும் பானுமதியின் மகன் ஆதிரன் (கே.ஜெ.ஆர்)இ ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும் தடகளப் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தும் திறமையான ஓட்டப்பந்தய வீரராக உருவாகிறார். தனது கடின உழைப்பால் மாநிலஇ தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்துஇ நாட்டிற்காக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைத்து தகுதிகளையும் பெறுகிறார். ஆனால் விளையாட்டுத் துறையில் நிலவும் அதிகார அரசியல்இ ஊழல்இ பாரபட்சம் மற்றும் அமைச்சரின் அலட்சியம் காரணமாகஇ அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பும் அங்கீகாரமும் அநியாயமாக பறிக்கப்படுகிறது. திறமை இருந்தும் சமூக மற்றும் பொருளாதார பின்னணி காரணமாக ஒதுக்கப்படும் ஆதிரன்இ தனக்கு நேர்ந்த அநீதியை அமைதியாக ஏற்றுக்கொள்ளாமல் சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்ட முடிவு செய்கிறார். தனக்காக மட்டுமல்லஇ தன்னைப் போன்ற திறமையான பல விளையாட்டு வீரர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார். தகுதியான வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதிஇ வாய்ப்பு மற்றும் அங்கீகாரத்தை சுரண்டும் அமைப்புக்கு எதிராகஇ காமன்வெல்த் போட்டிகளையே தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார். அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப் போராட்டம்இ அதிகார வர்க்கத்துடனான மோதல்இ உண்மைக்கான அவரது விடாமுயற்சி ஆகியவை கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. இறுதியில் ஆதிரனின் போராட்டம் வெற்றி பெறுகிறதாஇ அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதாஇ விளையாட்டுத் துறையில் நிலவும் அநீதிக்கு தீர்வு கிடைக்கிறதா என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சமூக அக்கறை கொண்ட மீதிக்கதை.

கே.ஜெ.ஆர் ஆதிரன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு விளையாட்டு வீரனின் உடல்மொழிஇ மன அழுத்தம்இ கோபம்இ அவமானம்இ மற்றும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் திண்மை ஆகியவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஆதிரன் என்பது வெறும் ஓட்டப்பந்தய வீரன் அல்ல அவன் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு சாமானிய மனிதன். அந்த வலியை கே.ஜெ.ஆர் தன் முகபாவனைகள் மூலமாகவும்இ உடல் அசைவுகள் மூலமாகவும்இ பேசும் தொனியில் இருக்கும் அழுத்தம் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார். குறிப்பாகஇ பயிற்சி காட்சிகளிலும்இ கோர்ட் ரூம் காட்சிகளிலும்இ தன் உரிமை பறிக்கப்படுவதால் உள்ளுக்குள் பொங்கும் சீற்றத்தையும்இ அதே சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் முயற்சியையும் துல்லியமாக காட்டுகிறார். அவர் நடிப்பில் ஒரு ரா எணர்ஜி இருக்கிறதுஇ அதுவே கதையின் நிஜத்தன்மையை உயர்த்துகிறது. சில இடங்களில் அனுபவத்தின் பளிச்சிடல் குறைவாகத் தோன்றினாலும்இ அந்த இயல்பான தடுமாற்றமே கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறது. குடும்பக் காட்சிகளில் அவர் காட்டும் மென்மையும்இ வெளியில் நீதிக்காகக் குரல் கொடுக்கும் தருணங்களில் வரும் கடுமையும்இ இரண்டு தளங்களையும் அவர் கச்சிதமாக கையாள்கிறார். இது சுமாரான நடிப்பாக இல்லாமல்இ கதையின் உணர்ச்சி ஓட்டத்துக்கு வலு சேர்த்து மெருகேற்றும் நடிப்பாக மாறுகிறது.

விஜி வெங்கடேஷ் ஆண்டாளாக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்றக் காட்சிகளில் தனது வசன உச்சரிப்புஇ உடல்மொழி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் கதைக்கு வலு சேர்த்துஇ பார்வையிலே ஒவ்வாமை உமிழும் கம்பீரம்இ சட்டத்தின் பக்கம் நிற்கும் உறுதிஇ மற்றும் எதிரணியை எதிர்கொள்ளும் கூர்மை ஆகியவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் தாயாக பானுமதி கதாபாத்திரத்தில் ரமா இயல்பானஇ குடும்பபாங்கான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஒரு தாயின் பாசம்இ வறுமையின் சுமைஇ வலிஇ உறுதி மற்றும் மகனுக்காக உள்ள அக்கறை ஆகியவற்றை முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார்.

சிந்தூரி கதையின் நாயகனுக்குத் தோள் கொடுத்துஇ இக்கட்டான சூழ்நிலைகளில் அவனது போராட்டத்திற்குப் பின்னால் நிற்கும் சத்யா கதாபாத்திரத்தில் மிக எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். வணிகப் படங்களின் வழக்கமான நாயகிப் பாத்திரமாக இல்லாமல்இ கதையோடு பயணித்து ஆதிரனின் லட்சியத்திற்குத் துணையாக நின்றுஇ படம் எங்கும் தொய்வு இல்லாமல் நகர்வதற்குத் தனது பங்களிப்பைத் தந்துள்ளார். வசுந்தரா பயிற்சியாளர் ருத்ராவாகஇ வீரனை வடிவமைக்கும் முக்கிய பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.

அஜித் கோஷி மனோஜ் கதாபாத்திரத்தில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி கதையின் முக்கிய தருணங்களுக்கு வலு சேர்க்கிறார். நீதிபதியாக வரும் ரங்கராஜ் பாண்டே தனது கம்பீரமான தோற்றமும் அளவான நடிப்பும் மூலம் நீதிமன்றக் காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறார். அமைச்சராக நடித்துள்ள மன்சூர் அலிகான் தனது தனித்துவமான திரைநடையால் எதிர்மறை கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இசபெல்லா (செல்வி)இ ஜானகிஇ ராம்ஜிஇ அருள் டி. சங்கர்இ கார்த்திக்இ அந்தோணிஇ ஷான் மற்றும் விமல்குமார் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை இயக்குநர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளதுடன்இ திரையில் பெரிய பகட்டு இல்லாவிட்டாலும்இ கதையின் அரசியல்இ நீதிமன்றம்இ குடும்பம்இ மற்றும் பின்னணிச் சூழலை கச்சிதமாக தாங்கிஇ திரைக்கதை நகர்வுக்கு தேவையான பங்களிப்பை அளித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக அமைந்து பல முக்கிய காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகள் தேவையான இடங்களில் மட்டுமே கச்சிதமாக அமைந்து நாயகனின் போராட்டத்தை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகின்றன.

ஏ.விஸ்வநாதின் ஒளிப்பதிவு விளையாட்டுக் களங்கள்இ நீதிமன்றக் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை துல்லியமான கோணங்கள் மூலம் அழகாகப் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

ராமு தங்கராஜின் கலை இயக்கம் கதைக்குத் தேவையான சூழல்களை இயல்பாக உருவாக்கி படத்தின் நம்பகத்தன்மைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

படத்தொகுப்பாளர் தினேஷ் குமார் காட்சிகளை தொய்வு இல்லாமல் தொகுத்து விறுவிறுப்பான திரைக்கதை நகர்வுக்கு உதவியுள்ளார். முதல் பாதியில் இன்னும் சற்றே கத்திரித்து இருக்கலாம் என்றாலும் இரண்டாம் பாதி அதை ஈடு செய்கிறது.

இயக்குநர் தென்பாதியான்இ ஒரு சாதாரண விளையாட்டு வீரனின் உரிமைப் போராட்டத்தை சமூக அக்கறையுடன் கூடிய திரைக்கதையாக நேர்த்தியாக கையாண்டுள்ளார். விளையாட்டுத் துறையில் நிலவும் அரசியல்இ அதிகார துஷ்பிரயோகம்இ அங்கீகாரம் மறுக்கப்படும் திறமைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்திஇ உணர்வுகளுக்கும் விறுவிறுப்புக்கும் சமநிலை ஏற்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்களை இயக்குநர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி நடிக்க வைத்திருப்பதுடன்இ சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை எளிமையாகவும் தாக்கத்துடனும் சொல்லும் முயற்சியில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளார்.

#ANGIKAARAM REVIEW
Comments (0)
Add Comment