சிங் கீதம் சினிமா விமர்சனம்:

வைஜெயந்தி மூவிஸ் சார்பில் நாக் அஸ்வின் தயாரித்திருக்கும் சிங் கீதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

இதில் அஹல்யா பம்ரூ – கௌரி, அயான்– பிரதாப், ஷாலினி கொண்டேபூடி – ரேணு, நிவேதா பெத்துராஜ் – சைலஜம்மா, ராகுல் ரவீந்திரன் – உதய் மன்னேம், சிவ நாராயணா – மேற்பார்வையாளர் பெனர்ஜி– பிரம்மையா,வாம்சி – தாசு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்,நிர்வாக இயக்குந​ர்: சங்கல்ப் கோரா, ஒளிப்பதிவாளர்: அங்கூர் சி,கலை இயக்குநர்: அரவிந்த் மூலே,நிர்வாக தயாரிப்பாளர்: கீதா கவுதம்,எழுத்தாளர்கள்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், ​கவுதமி சல்லகுல்லா, ஷஷாங்க் சிந்தலபூடி & ரத்னா ஸ்ரீகர், நந்தகிஷோர் ஈமானி, ராகுல் வி ராஜேஷ்வர், ஆடை வடிவமைப்பு: அஜய் குமார் நம்பள்ளா,தயாரிப்பு நிர்வாகி: அனில் குமார் லக்கம்ராஜு,டிஜிட்டல் & இசை பங்குதாரர்: திவோ மியூசிக், டிஜிட்டல் மீடியா, மக்கள் தொடர்பு & சந்தைப்படுத்தல்: பிரசாத் பீமநாதம்,நிலைப்படப் புகைப்படங்கள்: சாய் கிருஷ்ணா,மேக்கிங்: ஸ்ரீனு நல்லா,ஒலி பதிவாளர்கள்: கிரண் எஸ், சின்னா கே, (பாடல்கள்) நாக்ரா, ரவி தேஜா ஜி.,மக்கள் தொடர்பு: யுவராஜ்

குபேரபுரம் என்ற வறண்ட சுரங்க கிராமம். மனிதர்களின் பேராசையாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பாலும் அந்த ஊரின் ஒட்டுமொத்த இயற்கையும் அழிக்கப்பட்டு, ஒரே ஒரு புனிதமான மரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அந்த மரத்தில் கௌரி (அஹில்யா) என்ற பெண் வசித்து வருகிறாள். சிறையிலிருந்து விடுதலையாகும் சுயநலக்காரனான பிரதாப் (அயான்) என்ற இளைஞன் தன் சொந்தப் பிரச்சினைகளுக்காக இந்த ஊருக்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில், அந்த ஊரின் சுரங்க அதிபரின் பெண் தொழிலதிபர் அந்த எஞ்சியிருக்கும் கடைசி மரத்தையும் அழிக்க முற்படும்போது, அந்த ஊரே ஒரு தெய்வீக சாபத்திற்கு ஆளாகிறது. அந்த சாபத்தின் விளைவாக, ஊர் மக்கள் அனைவரும் தங்களின் சாதாரண பேசும் திறனை இழந்து, தங்களின் கோபம், காதல், சண்டை என அனைத்து உணர்ச்சிகளையும் ‘பாடல்கள்’ வழியாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்ற விசித்திரமான கட்டாயம் ஏற்படுகிறது. மக்கள் எப்படித் தங்கள் பேராசையை உணர்ந்து, இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சாப விமோசனம் பெற்றார்கள் என்பதே மீதிக்கதை.

#SING GEETHAM REVIEW
Comments (0)
Add Comment