மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ், ஈரா என்டர்டெயின்மென்ட் சார்பில் சத்யா கரிகாலன், ஈரா சரவணன், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் அன்பே டயானா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.
இதல் பாரி இளவழகன் – சிருமாமில்ல சீதா கிருஷ்ணா, ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ், சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர், ரோஜா செல்வமணி- சரளா, பரிதாபங்கள் கோபி – பெங்க@ர் பாபா, செல் முருகன் – மங்கபாபு, நிகிலா சங்கர் – தனிஷா, இஸ்மத் பானு – சத்தியவதி, சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவினர்கள்:- இசை: பரத் சங்கர், ஓளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பு : பார்த்தா எம்ஏ,கலை இயக்குனர்: மகேந்திரன், இணை தயாரிப்பாளர்: டி நரேன்,கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர், நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர் நாகராஜன், தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: பாபா மணி, ஒலி வடிவமைப்பு – கலவை: டி உதய் குமார் (ஒலி அதிர்வு), ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், சரவண குமார், ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம், தலைமை ஒப்பனை கலைஞர்: எசூஃப். சசி குமார், சண்டைக் காட்சி: டான் அசோக், ஸ்டில்ஸ்: வி பாலாஜி ,மக்கள் தொடர்பு : யுவராஜ்
[17:47, 7/23/2026] henrryg1973: பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் காதல் கதை, மரபுவழி மனநிலை கொண்ட ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், ஆங்கிலோ-இந்திய பின்னணி கொண்ட பெண்ணுக்கும் இடையே மலரும் காதலைச் சொல்கிறது.பெரம்பூர் பகுதியில் விளையாட்டு பயிற்சியாளர் சிருமாமில்ல சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) ஒரு மரபுவழி, சற்றே கன்சர்வேட்டிவ் மனநிலை கொண்ட தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவன். இரயில்வே துறையில் வேலை செய்து ரிடையரான தந்தை சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் (சேத்தன்) சொந்த சமூகத்து மேல் பற்றுதலுடன் இருக்கும் கண்டிப்பான தாய் சரளா (ரோஜா செல்வமணி) அவனது உடன்பிறப்புகளான கணவனிடமிருந்து சிறு சண்டையில் பிரிந்து வந்து வாழும் சகோதரி சத்தியவதி (இஸ்மத் பானு) மற்றும் தம்பி சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர் (சுதர்சன் காந்தி) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறான்.
[17:48, 7/23/2026] henrryg1973: பாரி இளவழகனை பொறுத்தவரை, சிருமாமில்ல சீதா கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தை எழுதுவது, இயக்குவது, நடிப்பது என மூன்று பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் தன் தோள் மேல் சுமந்திருந்தாலும், அதன் சுமை எங்குமே திரையில் தெரியவில்லை. மனதளவில் தெளிவான ஒரு காதலனாக, மரபுவழி குடும்பத்தின் மூத்த மகனாக அவர் கொண்டு வரும் இயல்பான தன்மை, ‘ஜமா’ படத்தில் அவர் கொடுத்த தீவிரமான, கனமான நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, லேசான, குடும்ப பற்றுதல் கொண்ட இளைஞனாக உரிய மென்மையோடு வெளிப்படுகிறது. கோபம், பொறுமையின்மை, குடும்பத்தின் மேல் உள்ள பாசம், காதலியை இழந்துவிடுவோமோ என்கிற பயம் என ஒவ்வொரு உணர்ச்சியையும் மிகையில்லாமல் கடத்தி, எழுத்தாளர்-இயக்குனர் என்கிற இரட்டை பொறுப்பை நடிகராக ஒருபோதும் மறந்துவிடாமல் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது. முதலில் ஒரு தலையாக காதலிக்க தொடங்கி, தன் குடும்பத்திற்கு சரி வராத பெண் என்று கருதி விலக நினைக்கும் போது, காதலி சம்மதம் கிடைத்ததும் மகிழ்ச்சியாவதற்கு பதில் அதிர்ச்சியாகும் தருணத்தில் நடிப்பால் அசத்தியுள்ளார். பின்னர் காதலை துணிந்து சொல்ல தாயின் பிடிவாதம், கட்டாய விருப்பமில்லாத திருமண ஏற்பாடுகள், அதை தந்தையின் ஒத்துழைப்புடன் இறுதி வரை போராடும் இடத்தில் தனித்து நிற்கிறார். வெல்டன்.
மேஜிக் கோன்சால்வ்ஸாக ரம்யா ரங்கநாதன் இந்தப் படத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஆங்கிலோ-இந்திய பெண்ணுக்கே உரிய பேச்சு நடை, உடல் மொழி, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றை ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கும் இவர், ‘மேஜிக்” என்கிற பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாகவே திரையில் ஒரு காந்த சக்தியை வெளிப்படுத்துகிறார். காதலின் மென்மையான தருணங்களில் கண்களிலேயே பேசுவதும், குடும்ப மோதல் காட்சிகளில் உறுதியுடன் நிற்பதும் என இரு முனைகளிலும் சமமாக கவர்கிறார். காதலனை பக்கர் என்று அழைப்பது, நினைத்தால்; கிரிஷ் என்று அழைப்பதும் தன்னுடைய காதல் உண்மையானது தானா என்று சோதிப்பது, காதலை சொல்லும் தருணம், காதலனின் வீட்டிற்குள் புகுந்து செய்யும் ரகளை, பின்னர் காதலனிடம் கோபித்துக் கொண்டு வார்த்தையால் வறுத்தெடுக்கும் தருணம் என்று நறுக்கென்று துணிச்சலாக சவாலாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக உள்ளது.
சேத்தன் ஏற்றிருக்கும் சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் என்கிற கதாபாத்திரம், குடும்ப மரபையும் மதிப்பையும் காக்க நினைக்கும் ஒரு பெரியவரின் கடினமும் அதே நேரத்தில் உள்ளுர மென்மையும் கலந்த மனநிலையை சரியாக உணர்வுபூர்வமான குடும்பக் காட்சிகளில் இவரது அனுபவம் நிறைந்த நடிப்பு படத்திற்கு ஒரு ஸ்திரமான தன்மையை கொடுக்கிறது. பாரம்பரியமான தெலுங்குத் தந்தையாக இருந்தாலும், தன் மகனின் காதலுக்கு முழுமையாகத் தோள் கொடுக்கும் ஒரு முற்போக்கான, பாசமான அப்பா.படத்தின் ஆகச்சிறந்த பாசிட்டிவ் எனர்ஜி இவர்தான்! மகனின் ஆங்லோ-இந்தியக் காதலைப் புரிந்துகொண்டு அவனுக்குப் பக்கபலமாக நிற்பதும், மனைவியின் பிடிவாதத்தை எதிர்க்கும் காட்சிகளிலும் சேத்தன் தனது எதார்த்தமான முதிர்ந்த நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
ரோஜா செல்வமணி நடித்திருக்கும் சரளா, தமிழ்-தெலுங்கு கலந்த வசன உச்சரிப்புடன் ஒரு வலிமையான மறுவரவை பதிவு செய்திருக்கிறார். குடும்பத்தின் பெண் தலைவியாக, பிடிவாதத்திற்கும் பாசத்திற்கும் இடையே ஊசலாடும் அந்த பாத்திரத்தை உரிய தீவிரத்துடன் கையாண்டு, படத்தின் குடும்ப உணர்வுக்கு வலு சேர்க்கிறார். கதையின் முதன்மை முரண்பாடே இவர்தான். தன் தெலுங்கு பாரம்பரியம் மற்றும் குடும்ப வழக்கங்களை உயிராக மதிக்கும், எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாத மிகக் கடுமையான, ஸ்ட்ரிக்ட்டான தாய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜாவிற்கு ஒரு பவர்ஃபுல்லான நெகட்டிவ் ஷேடு கொண்ட பாத்திரம். தன் மகன் ஒரு ஆங்லோ-இந்தியப் பெண்ணைக் காதலிப்பதை அக்மார்க் பிடிவாதத்துடன் அவர் எதிர்க்கும் காட்சிகளும், கணவன்-மகன் கூட்டணிக்கு எதிராக அவர் காட்டும் அந்த ஆக்ரோஷமான முகபாவனைகளும் தியேட்டரில் மிரட்டல் ரகம்!
பரிதாபங்கள் கோபி பெங்க@ர் பாபாவாக, செல் முருகனின் மங்கபாபு, நிகிலா சங்கரின் தனிஷா, இஸ்மத் பானுவின் சத்தியவதி, சுதர்சன் காந்தியின் சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர் ஆகியோர் ஒவ்வொருவரும் தங்களுக்கான குறுகிய நேரத்திலேயே தங்கள் முத்திரையை பதிக்க முயன்று, படத்தின் நிலைத்த, யதார்த்தமான சூழலுக்கு தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர். குறிப்பாக பெங்க@ர் பாபாவும் மங்கபாபுவும் நகைச்சுவை தருணங்களில் புன்னகையை வரவழைக்கின்றனர்.
பரத் சங்கரின் இசை படத்தின் உணர்வுபூர்வமான மற்றும் லேசான தருணங்களுக்கு இயல்பாக இணைந்து செல்கிறது. பின்னணி இசை பெரும் இரைச்சலின்றி காட்சிகளின் உணர்வை மேலும் ஆழப்படுத்துகிறது. அம்மாவின் ஆக்ரோஷமான காட்சிகளுக்கு ஒரு மாஸான டோனையும், அப்பா-மகன் காம்போவிற்கு கலகலப்பான இசையையும், ஆங்லோ-இந்திய காலனிக் காட்சிகளில் ஜாஸ் பாணி துள்ளல் இசையையும் கொடுத்துக் காட்சிகளுக்கு அசல் தன்மையைக் கூட்டியுள்ளார்.
ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு பெரம்பூரின் வண்ணமயமான தெருக்களையும் உயிரோட்டமான சூழலையும் அழகாக பதிவு செய்து படத்திற்கு ஒரு தனித்துவமான காட்சி அடையாளத்தை கொடுத்திருக்கிறார்.பெரம்பூர் ரயில்வே குவார்ட்டர்ஸின் அந்த பழமையான வெஸ்டர்ன் அழகையும், சிருமாமில்ல குடும்பத்து வீட்டின் அக்மார்க் பாரம்பரியத் தன்மையையும் தனது கேமரா கோணங்கள் மற்றும் ‘லைட்டிங்’ மூலம் விஷ{வலாக மிகவும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.
பார்த்தா எம்ஏவின் படத்தொகுப்பு, குறிப்பாக இடைவேளைக்குப் பின் திரைக்கதையை நேர்த்தியாகவும் வேகமாகவும் நகர்த்துகிறது, என்றாலும் முதல் பாதியில் இன்னும் இறுக்கமான கத்தரிப்பு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மகேந்திரனின் கலை இயக்கம், ஆங்கிலோ-இந்திய குடும்பச் சூழலையும் பெரம்பூர் பகுதியின் யதார்த்தத்தையும் நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தி, படத்தின் களத்திற்கு ஆழம் சேர்க்கிறது. தெலுங்கு வீட்டின் பூஜை அறை மற்றும் ஆங்லோ-இந்திய வீட்டின் உட்புற அலங்காரங்கள் என இரண்டிற்குமான வித்தியாசத்தை அசல் தன்மையுடன் கொண்டு வந்துள்ளது.கதையின் பெரும்பகுதி பெரம்பூரின் பரபரப்பான தெருக்களிலும், அதன் அடையாளமான இடங்களிலும் நகர்கிறது. இந்த பகுதியே திரைக்கதைக்கு ஒரு உயிரோட்டமான, யதார்த்தமான பின்னணியை அளிக்கிறது. கதையின் ஆரம்ப பகுதியில், சீதா-டயானா இருவரின் அறிமுகம், அவர்களுடைய குடும்பச் சூழல், மற்றும் காதல் மெல்ல மெல்ல வேரூன்றும் விதம் ஆகியவை நிதானமாக விவரிக்கப்படுகின்றன. காதலை வீட்டில் தெரிவிக்க வேண்டிய தருணம் வரும்போது, எதிர்பார்த்தபடியே பெரும் எதிர்ப்பும் பதற்றமும் கிளம்புகின்றன குடும்ப பகைமைகள் மீண்டும் தலைதூக்குகின்றன, குடும்ப பாரம்பரியங்கள், பழைய பகைமைகள், பண்பாட்டு வேறுபாடுகள் என பல தடைகளைத் தாண்டி இந்த இருவரும் தங்கள் காதலை நிலைநிறுத்த போராடும் விதம் திரைக்கதையின் மையம். வழக்கமான காதல் திரைப்படங்களின் பாதையில் பயணித்தாலும், குடும்ப உணர்வுகளை முதிர்ச்சியுடன் அணுகும் விதத்தில் இயக்குனர் பாரி இளவழகனின் திறமையால் இக்கதை தனித்து நிற்கிறது. பெற்றோரை வில்லனாக்காமல், புரிதலையும் பொறுமையையும் முன்வைக்கும் கோணம் பாராட்டுக்குரியது. முதல் பாதி கதாபாத்திரங்களையும் களத்தையும் அமைப்பதில் மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பின் திரைக்கதை வேகம் பெற்று, திருமண மண்டப காட்சிகள், உணர்வுபூர்வமான உரையாடல்கள் என இரண்டாம் பாதி நெருக்கமான குடும்ப தருணங்களுடனும் நகைச்சுவையுடனும் ஈர்த்து வெற்றி வாகை சூடி வசூலில் சாதனை படைத்துள்ளார் இயக்குனர் பாரி இளவழகன். பாராட்டுக்கள்.