வாரண்ட் வெப்சீரிஸ் விமர்சனம்

வாரண்ட் இணையத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர் தயாரித்திருக்கும் வாரண்ட்.தமிழ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், அருள் ஜோதி, சாயாதேவி, நம்ரிதா, மீனா, கௌசல்யா, வையாபுரி, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்கம் –கதை, திரைக்கதை, வசனம் – பிரசாந்த் பாண்டியராஜ் – விக்னேஷ் நடராஜன், பின்னணி இசை – சாம் சிஎஸ்,ஒளிப்பதிவாளர் – அசோக் குமார், எடிட்டர் – ஆர் ராமர்,மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

இந்தத் தொடர் கோட்டை கருப்புசாமி (பிரசாந்த் பாண்டியராஜ்) என்ற ​ஒரு எளிய போலீஸ்காரரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் நகர்கிறது. எம்.எஸ்.சி பட்டதாரியான கோட்டை கருப்புசாமியை (பிரசாந்த் பாண்டிராஜ்) அரசாங்க உத்யோகத்தில் அமர வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார் ரிடயர்ட் பள்ளி தலைமையாசிரியர் தந்தை (பாலாஜி சக்திவேல்). அதற்காக தீவிரமாக முயற்சி செய்தாலும் கருப்பசாமியால் தேர்ச்சியடைய முடியாமல் விரக்தியில் இருக்கும் போது போலீஸ் கமிஷனரிடம் டிரைவராக இருக்கும் அவரது தாய்மாமன் (காளி வெங்கட்) ஆறுதல் சொல்லி அவரை போலீஸ் வேலைக்கான தேர்வில் எழுத வைக்கிறார். இறுதியில் தேர்வில் தேர்ச்சி பெற்று, தாய் மாமனின் சிபாரிசில் மூன்று மாத பயிற்சியிலேயே திருச்சி பொன்மலை கோட்டை காவல் நிலையத்தில் கோட்டை கருப்புசாமி ஒரு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றுகிறார். இவர் மிகவும் சாதுவான, மென்மையான மற்றும் சட்டத்திற்குப் பயந்து நடக்கும் ஒரு நபர் என்பதால் இந்த சுபாவத்தை அந்தத் தாலுகா காவல் நிலையமே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இன்ஸ்பெக்டர் வீரமணி (அருள் தாஸ்) மற்றும் சக காவலர்கள் அவரை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல், கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். காவல் துறைக்குள் தொடர்ந்து நடக்கும் இந்த வன்முறையும், மரியாதைக் குறைவும் அவரை மனரீதியாகப் பாதிக்கிறது. இதன் உச்சகட்டமாக, அவரது வாழ்க்கையையே மாற்றிப்போடும் ஒரு கொடூரமான தாக்குதல் ஒரு கைதியால் அரங்கேறுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தன் பாணியில் பழிவாங்கத் துணிகிறார். மென்மையான போலீஸ்காரராக இருந்த கருப்புசாமி, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த சிஸ்டமும் பயப்படும் ஒரு கொடூரமான வேட்டைக்காரனாக மாறுகிறார். காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட, யாரும் கண்டு கொள்ளாத பழைய ‘கைது வாரண்ட்’ வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு கருப்பசாமியிடம் வருகிறது. ஆரம்பத்தில், ‘சீருடை அணிவது எளிது, ஆனால் குற்றவாளிகளைப் பிடிப்பது கடினம்’ என்பதை அவர் உணர்கிறார்.

பழைய குற்றவாளிகளைத் தேடி அவர் நடத்தும் விசாரணைகள் வழக்கமான சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதில்லை. தனக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் மற்றும் ஆத்திரத்தின் காரணமாக, குற்றவாளிகளைப் பிடிக்க அவர் மிகக் கொடூரமான மற்றும் வன்முறையான வழிகளைக் கையாள்கிறார். குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கில் கருப்புசாமி எல்லை மீறிச் செல்லும்போது, அவரது விசாரணையின் தீவிரத்தால் ஒரு கைதி காவல் துறையின் கஸ்டடியில் மரணமடைகிறான். இந்த ஒரு சம்பவம், அவரது ஒட்டுமொத்த விசாரணை முறையையும், சட்டத்திற்குப் புறம்பாக அவர் எடுக்கும் முடிவுகளையும் பெரும் கேள்விக்குறியாக்குகிறது. அப்பாவியாக இருந்த ஒரு காவலர், சிஸ்டத்தின் அநீதியால் எப்படி ஒரு பயங்கரமான அதிகார சக்தியாக மாறி, பழைய வாரண்ட் வழக்குகளைத் தனது சொந்த பாணியில் விசாரிக்க, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எப்படி சாதுர்யமாக மீண்டார் என்பதையே இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் உருவாக்குநராக மட்டுமல்லாமல், முதன்மைக் கதாபாத்திரமான கோட்டை கருப்புசாமியாகவும் பிரசாந்த் பாண்டியராஜ் நடித்துள்ளார். காவல் நிலையத்திற்குள் தொடர்ந்து அவமதிப்புகளைச் சந்திக்கும் ஒரு எளிய காவலரின் இயலாமையையும், பின்னர் ஒரு பெரிய தாக்குதலுக்குப் பின் அவர் எடுக்கும் கொடூரமான விஸ்வரூபத்தையும் தனது எதார்த்தமான நடிப்பால் மிகச் சிறப்பாகக் கடத்தியுள்ளார். மென்மையான மனிதன் எப்படி ஒரு பயங்கரமான அதிகார சக்தியாக மாறுகிறான் என்ற பரிணாமத்தை அவரது உடல்மொழியும், பார்வைகளும் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. தன்னுடைய இயலாமையை லாக்அப் டெத்தை விசாரிக்கும் ஜெயபிரகாஷ் குழுவிடம் விவரிக்கும் தருணங்கள், கைதி சரவணன் தப்பித்துச் செல்ல அதனால் ஏற்படும் அவமானம், கேலி கிண்டல்கள் என்று மனஉளைச்சலில் தவிக்கும் போதும், தன் தந்தையின் அழுத்தமான அறிவுரையாக முகமது அலியின் அடையாளத்தை மீட்டெடுக்கும் கதையை கேட்டு பின்னர் தெளிவடைந்து தன்னை ஏளனம் செய்தவர்களே தன்னுடைய முழுப்பெயரை சொல்ல வைக்கும் தருணம், பின்னர் வாரண்ட் வழக்குகளை விசாரிக்க செல்லும் இடங்களில் முதலில் மென்மையாகவும் அப்பாவியாகவும் பல செலவுகள் செய்து வழக்கை முடிக்க எடுக்கும் செயல்கள் பின்னர் போகப் போக தன்னுடைய பாணியை மாற்றி முரட்டுத்தனமாக கையாண்டு வழக்குகளை விரைவாக முடிக்க எடுக்கும் துணிச்சல், பாலியல் தொழிலாளியை வைத்து கைதி சரவணனை பிடிக்க எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் பல சங்கடங்;கள், திருமணம் தடைபட்டு போக அதற்காக வருந்தாமல் தன்னுடைய வேலையை முடிக்க மும்முரமாக செல்வது, லாக் அப் டெத் விசாரணை என்று பிரசாந்த் பாண்டியராஜ் எட்டு தொடர்களின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறார். இவரின் இயல்பான நடிப்பும், சராசரி கடைநிலை போலீஸ்காரரின் ஆதாங்கத்தையும், ஏக்கத்தையும் சரியாக பிரதிபலித்து அசலாக வாழ்ந்துள்ளார்.இந்தத் தொடரின் உருவாக்குநராக மட்டுமல்லாமல், முதன்மைக் கதாபாத்திரமான கோட்டை கருப்புசாமியாகவும் பிரசாந்த் பாண்டியராஜ் நடித்துள்ளார். காவல் நிலையத்திற்குள் தொடர்ந்து அவமதிப்புகளைச் சந்திக்கும் ஒரு எளிய காவலரின் இயலாமையையும், பின்னர் ஒரு பெரிய தாக்குதலுக்குப் பின் அவர் எடுக்கும் கொடூரமான விஸ்வரூபத்தையும் தனது எதார்த்தமான நடிப்பால் மிகச் சிறப்பாகக் கடத்தியுள்ளார். மென்மையான மனிதன் எப்படி ஒரு பயங்கரமான அதிகார சக்தியாக மாறுகிறான் என்ற பரிணாமத்தை அவரது உடல்மொழியும், பார்வைகளும் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. தன்னுடைய இயலாமையை லாக்அப் டெத்தை விசாரிக்கும் ஜெயபிரகாஷ் குழுவிடம் விவரிக்கும் தருணங்கள், கைதி சரவணன் தப்பித்துச் செல்ல அதனால் ஏற்படும் அவமானம், கேலி கிண்டல்கள் என்று மனஉளைச்சலில் தவிக்கும் போதும், தன் தந்தையின் அழுத்தமான அறிவுரையாக முகமது அலியின் அடையாளத்தை மீட்டெடுக்கும் கதையை கேட்டு பின்னர் தெளிவடைந்து தன்னை ஏளனம் செய்தவர்களே தன்னுடைய முழுப்பெயரை சொல்ல வைக்கும் தருணம், பின்னர் வாரண்ட் வழக்குகளை விசாரிக்க செல்லும் இடங்களில் முதலில் மென்மையாகவும் அப்பாவியாகவும் பல செலவுகள் செய்து வழக்கை முடிக்க எடுக்கும் செயல்கள் பின்னர் போகப் போக தன்னுடைய பாணியை மாற்றி முரட்டுத்தனமாக கையாண்டு வழக்குகளை விரைவாக முடிக்க எடுக்கும் துணிச்சல், பாலியல் தொழிலாளியை வைத்து கைதி சரவணனை பிடிக்க எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் பல சங்கடங்;கள், திருமணம் தடைபட்டு போக அதற்காக வருந்தாமல் தன்னுடைய வேலையை முடிக்க மும்முரமாக செல்வது, லாக் அப் டெத் விசாரணை என்று பிரசாந்த் பாண்டியராஜ் எட்டு தொடர்களின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறார். இவரின் இயல்பான நடிப்பும், சராசரி கடைநிலை போலீஸ்காரரின் ஆதாங்கத்தையும், ஏக்கத்தையும் சரியாக பிரதிபலித்து அசலாக வாழ்ந்துள்ளார்.இயக்குனர் விக்னேஷ் நடராஜன், கதை உருவாக்கத்தில் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைந்து எழுதியுள்ளார்.காவல்துறைக்குள் இருக்கும் உள்வட்டார வன்முறை, சாமானிய காவலர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல், மற்றும் கஸ்டடி மரணம் போன்ற தற்காலச் சூழல்களுக்குப் பின்னால் இருக்கும் சட்டச் சிக்கல்களை மிகவும் தைரியமாக எழுதியுள்ளனர். விக்னேஷ் நடராஜனின் இயக்கம் தேவையற்ற ஆரவாரங்கள் இல்லாமல், ஒரு நிஜமான காவல் நிலையத்திற்குள் நாமே பயணிப்பது போன்ற ஒரு அழுத்தமான க்ரைம் த்ரில்லர் அனுபவத்தைத் தருகிறது. காவல் நிலையத்திற்குள் சக அதிகாரிகளால் தொடர்ந்து அவமதிக்கப்படும் எளிய காவலர் கோட்டை கருப்புசாமி, பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது எப்படி ஒரு கொடூரமான அதிகாரியாக மாறி சட்டத்தையே தன் கையில் எடுக்கிறார் என்ற க்ரைம் த்ரில்லர் தொடரின் விறுவிறுப்பான காட்சிகளையும், கோட்டை கருப்புசாமியின் அந்த அதிரடியான மாற்றத்தையும் வாரண்ட் இணையத்தொடரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும், திருப்பங்களுடன் அதிரடியான இயக்கத்தில் கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன். வாழ்த்துக்கள்.

ரேட்டிங்: 3.5/5

#warrant#ZEE5 Original ’Warrant’
Comments (0)
Add Comment