விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்திருக்கும் பெத்தி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்க திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.
இதில் ராம் சரண்- பெத்தி, ஜான்வி கபூர் – அச்சியம்மா, சிவ ராஜ்குமார் – கௌர் நாயுடு, ஜகபதி பாபு – அப்பல சூரி, திவ்யேந்து சர்மா – ராம் புச்சி, பொமன் இராணி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவினர்கள் : இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா, இசை: ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு, தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா, படத்தொகுப்பு: நவீன் நூலி, நிர்வாக தயாரிப்பாளர்: ஏ.லு. பிரவீன் குமார், மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ, மக்கள் தொடர்பு : யுவராஜ்.
இந்தியாவின் ஒலிம்பிக் வீழ்ச்சிக்குப் பிறகு, விளையாட்டுத் துறை அதிகாரி பைஸ்வால் (போமன் இரானி) திறமையான கிராமிய வீரர்களைத் தேடி விஜயநகரம் வருகிறார். அங்கு பல விளையாட்டுக்களில் தனித்துவமான சாதனை படைத்துள்ள பெத்தியைப் பற்றித் தெரிகிறது. பெத்தி தனது அசாத்தியத் திறமையை வெறும் பணத்திற்காகவோ அல்லது தன் சுயநலத்திற்காகவோ பயன்படுத்தாமல், தனது ஒடுக்கப்பட்ட கிராமத்திற்கு உலகளவில் ஒரு அங்கீகாரத்தையும் பெருமையையும் தேடித்தர எப்படிப் போராடுகிறார்? அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன? என்பதே ‘பெத்தி’ திரைப்படத்தின் உணர்வுபூர்வமான கதையாக ஒரு மலைவாசி அதிகாரி பைஸ்வாலிடம் விவரித்து அந்த இடத்திற்கு கூட்டிச் செல்வது போல் கதைக்களம் விரிவடைகிறது. கதை 1990-களின் பின்னணியில், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய மலை கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மலை கிராமத்திற்கு அரசாங்க பதிவேடுகளில் எந்தவொரு அதிகாரப்பூர்வ ‘பெயரோ’ அல்லது முகவரியோ கிடையாது. சுற்றியுள்ள மக்கள் அதை மலைக்கு கீழே இருக்கும் கிராமம் என்றுதான் அழைக்கிறார்கள். முறையான சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர் என எதுவுமே இல்லாத, வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லாத அந்த நாடோடி கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் கிராமத்திற்கு ஒரு ரயில் நிலையத்தையாவது கொண்டு வந்து, அதற்கு அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் அப்பலசூரி (ஜெகபதி பாபு) 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடித் தோற்றுப் போய் நிற்கிறார்.இந்த கிராமத்தில் வாழும் பெத்தி (ராம் சரண்) ஒரு அசாத்தியமான திறமைகளைக் கொண்ட, முரட்டுத்தனமான ஒரு கிராமத்து இளைஞன்.
உள்@ர் அரசியல்வாதியின் மகளாக, எழில் கொஞ்சும் கிராமத்துப் பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். முதல் பாதியில் வரும் இவரது காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களைக் கவர்ந்தாலும், இரண்டாம் பாதியில் பெத்திக்கு உறுதுணையாக நிற்பது போல் சில காட்சிகளில் வந்து படம் முழுவதும் முக்கியத்துவம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.மிர்சாபூர்’ தொடரின் மூலம் பிரபலமான ‘முன்னா பையா’ திவ்யேந்து சர்மாவின் தெலுங்கு திரையுலக அறிமுகம் இது. பெத்தியை ஏலம் எடுத்துத் தனது கிரிக்கெட் அணிக்காகப் பயன்படுத்தும் ஒரு தந்திரமான உள்@ர் பிரமுகராக, தனது தனித்துவமான உடல்மொழியால் நெகட்டிவ் பாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பெத்திக்கு பாரம்பரிய மல்யுத்தத்தைக் கற்றுக்கொடுக்கும் குருவாக மிகக் குறுகிய காலமே வந்தாலும், திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தனது கம்பீரமான குரலாலும், நடிப்பாலும் தியேட்டரில் மாஸ் கைதட்டல்களைப் பெறுகிறார்.
பொமன் இராணி ஆரம்ப காட்சியில் கதையின் ஒட்டத்தை ஆரம்பித்து இறுதி வரை பயணிக்கும் அரசாங்க அதிகாரியாக வந்து அசத்தியுள்ளார்.
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் இசைதான் இப்படத்தின் மிகப்பெரிய தூண். வழக்கமான மாஸ் மசாலா படங்களில் இருந்து விலகி, மண்ணின் தன்மையைக் காட்டும் நாட்டுப்புற இசையையும், சர்வதேசப் போட்டிகளுக்கான பிரம்மாண்ட பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பும், கிளைமாக்ஸில் ராம் சரண் செயற்கைக் காலுடன் ஓடும்போது வரும் ‘மசா மசா’ போன்ற பாடல்களும், அதன் பின்னணி இசையும் தியேட்டரில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஆந்திராவின் கடலோர மற்றும் கிராமியப் பின்னணியை, அதன் அசல் தன்மையுடன் பழுப்பு மற்றும் பச்சை நிற டோன்களில் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தின் வேகம், மல்யுத்தக் களத்தின் புழுதி, மற்றும் ஓட்டப்பந்தயத்தின் விறுவிறுப்பு எனப் பல்வேறு விளையாட்டுக் காட்சிகளைத் தனது கேமரா கோணங்களால் பார்வையாளர்களையும் அந்த மைதானத்திற்குள் கொண்டு சேர்த்துள்ளார்.
படத்தொகுப்பு நவின் நூலி படத்தின் மொத்த ஓட்ட நேரம் 189 நிமிடங்கள் (3 மணி நேரம் 9 நிமிடங்கள்). முதல் பாதியில் சில தேவையற்ற காதல் மற்றும் கமர்ஷியல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் என்ற விமர்சனம் இருந்தாலும், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான பயிற்சியையும், கிளைமாக்ஸ் ஓட்டப்பந்தயத்தையும் தொய்வில்லாமல் மிகக் கச்சிதமாகத் தொகுத்துள்ளார்.
‘உப்பென்னா’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் புச்சி பாபு சனா கையில் எடுத்துள்ள இந்த பான்-இந்தியா விளையாட்டு நாடகம் அவரது எழுத்துத் திறமைக்குச் சான்று. முதல் பாதியில் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாக்களை (ஹீரோ இன்ட்ரோ, காதல் காட்சிகள்) சற்று நீளமாகக் கையாண்டிருந்தாலும், இடைவேளைக்கு முந்தைய காட்சியிலும், இரண்டாம் பாதியில் மாற்றுத்திறனாளி விளையாட்டுக் களத்தை எமோஷனலாக மாற்றிய இடத்திலும் இயக்குநராகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதையை விளையாட்டுடன் இணைத்த விதம் அற்புதம்.’பெத்தி’ திரைப்படம் ஒரு சாதாரண விளையாட்டுப் படமாக நின்றுவிடாமல், ராம் சரணின் அசுரத்தனமான அர்ப்பணிப்பாலும், ஏ. ஆர். ரஹ்மானின் ஆன்மார்த்தமான இசையாலும், புச்சி பாபு சனாவின் அழுத்தமான எமோஷனல் உணர்வாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.