நடிகர்கள்:-
நயன்தாரா – தேவயானி
கவின் – மயில்சாமி
ராதிகா சரத்குமார் – பரிமளா
பாக்யராஜ்.கே – வாத்தியார்
பிரபு – இந்திரன்
அம்ருதா சீனிவாசன் – லக்ஸ்
ஏவஎ கணேஷ் – மருத்துவர்.சண்முகி
ஃபெப்சி விஜயன் – பரிசுதம்
ரெஞ்சி பணிக்கர் – தாசன்
சத்யன் – யோகேந்திரன்
ஆதித்ய கதிர் – கணபதி
குரேஷி – கோபி
காவியா அறிவுமணி – மைதிலி
மிர்ச்சி கெமி – தன்யா
தொழில்நுட்பக் குழு:-
எழுதி இயக்கியவர்: விஷ்ணு எடவன்
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால்
தயாரிப்பு நிறுவனங்கள் : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் – Z ஸ்டுடியோஸ்
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜேஷ் சுக்லா
எடிட்டர்: பிலோமின் ராஜ்
இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின்
கலை இயக்குனர்: கண்ணன்.எஸ்
நடன இயக்குனர்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி
ஸ்டண்ட்: தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர்: காவ்யா ஸ்ரீராம், அனு வர்தன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
காதலில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து, ‘அரேஞ்ச்டு மேரேஜ் வேண்டாம்; காதலித்துத்தான் திருமணம் செய்வேன்’ என்ற உறுதியோடு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குத் தப்பித்து வருகிறார் மயில்சாமி (கவின்). மற்றொரு புறம், குடிக்கு அடிமையான தந்தையாலும், விருப்பமில்லாத ஒரு கொடூரமான நபருடன் கட்டாயத் திருமணம் செய்யத் துடிக்கும் உறவினர்களிடமிருந்தும் தப்பிக்க பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு ஓடி வருகிறார் தேவயானி (நயன்தாரா). சென்னையில் தற்செயலாகச் சந்திக்கும் இருவருக்கும் இடையே ஆழமான நட்பு மலர்கிறது. தேவயானியின் மீது மயில்சாமிக்குக் காதல் பிறந்தாலும், அதை வெளிப்படுத்தத் தயங்குகிறார். இதனிடையே இருவரின் குடும்பத்தினரும் தேடிக் கொண்டு சென்னைக்கே வந்துவிட, அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்கவும் தேவயானியிடம் தன் அன்பை உணர்த்தவும் மயில்சாமி ஒரு பொய்யைச் சொல்கிறார். அந்தப் பொய்யைக் காப்பாற்ற அடுத்தடுத்து உருவாகும் களேபரங்களும், இரு குடும்பங்களின் உணர்ச்சிப் போராட்டங்களுமே ‘ஹாய்’ படத்தின் முதன்மைக் கதைக்களம்.மயில்சாமி கதாபாத்திரத்தில் தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும், துறுதுறுப்பான உடல்மொழியாலும் அரங்கத்தை நகைச்சுவையில் அலைமோத விட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் கவின். உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் பேசும் விழிகள் மூலம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி, ஒரு தலைமுறையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முதன்மையான கதாபாத்திரத்திற்கு முழு ஈடுபாடுடைய நடிகராகத் திகழ்கிறார்.
நயன்தாரா சமீபத்திய சீரியஸ் கதாபாத்திரங்களிலிருந்து விலகி, இதில் ரொமான்ஸ் அண்டு எலிகன்ஸ் கலந்த அழகோடு திரையில் தோன்றி செம்மையான நடிப்பை வழங்கியுள்ளார். தந்தையின் மீதான கோபம், நட்பின் வெளிப்படைத்தன்மை எனத் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான கனமான வெளிப்பாட்டை நேர்த்தியாகத் தந்து, நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான அமைதியும் நிதானமும் நிறைந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.
பாக்யராஜ்.கே மகனின் மனதை உணரும் தந்தையாகத் தனது அனுபவமிக்க நடிப்பால் திரையில் நிறைந்துள்ளார். 80-களின் இயல்பான பாணியில் பேசி, உணர்ச்சிமயமான காட்சிகளில் தீவிரமான ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி, இப்படத்தின் மூலமாக ஒரு நிறைவான கலை விருந்தை அளித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் மகனின் நலனில் அக்கறை கொண்ட தாயாகத் தனது இயல்பான மேனரிசங்களால் செம்ம கலக்கி எடுத்துள்ளார். குடும்பக் குழப்பங்களுக்கு நடுவே அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் மற்றும் வசன உச்சரிப்புகள் ஒவ்வொன்றும் தியேட்டரில் சிரிப்பலைகளைப் பரப்புகின்றன.
பிரபு குடிப் பழக்கத்தால் குடும்பத்தை இழந்த ஏக்கத்தையும், மகளின் மீது கொண்ட பாசத்தையும் தன் எழில்மிகு நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். தவறை உணர்ந்து கலங்கும் இடங்களில் இளைய திலகம் எனத் தமக்கு உள்ள பெயருக்கு ஏற்ப ஒரு அழுத்தமான பதிவைச் செய்துள்ளார்.
மயிலின் நண்பனாக வரும் ஆதித்ய கதிர் மற்றும் குரேஷி ஆகியோர் டைமிங் கவுன்ட்டர்கள் மூலம் சிரிப்புக்கு கேரண்டி தருகின்றனர். விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், காவ்யா அறிவுமணி, மிர்ச்சி கெமி என அனைவரும் கொடுக்கப்பட்ட இடங்களில் சரியான அளவில் தங்கள் பங்களிப்பைச் செய்து திரைக்கு வண்ணம் சேர்த்துள்ளனர்
மயில்சாமி கதாபாத்திரத்தில் தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும், துறுதுறுப்பான உடல்மொழியாலும் அரங்கத்தை நகைச்சுவையில் அலைமோத விட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் கவின். உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் பேசும் விழிகள் மூலம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி, ஒரு தலைமுறையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முதன்மையான கதாபாத்திரத்திற்கு முழு ஈடுபாடுடைய நடிகராகத் திகழ்கிறார்.
நயன்தாரா சமீபத்திய சீரியஸ் கதாபாத்திரங்களிலிருந்து விலகி, இதில் ரொமான்ஸ் அண்டு எலிகன்ஸ் கலந்த அழகோடு திரையில் தோன்றி செம்மையான நடிப்பை வழங்கியுள்ளார். தந்தையின் மீதான கோபம், நட்பின் வெளிப்படைத்தன்மை எனத் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான கனமான வெளிப்பாட்டை நேர்த்தியாகத் தந்து, நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான அமைதியும் நிதானமும் நிறைந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.
பாக்யராஜ்.கே மகனின் மனதை உணரும் தந்தையாகத் தனது அனுபவமிக்க நடிப்பால் திரையில் நிறைந்துள்ளார். 80-களின் இயல்பான பாணியில் பேசி, உணர்ச்சிமயமான காட்சிகளில் தீவிரமான ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி, இப்படத்தின் மூலமாக ஒரு நிறைவான கலை விருந்தை அளித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் மகனின் நலனில் அக்கறை கொண்ட தாயாகத் தனது இயல்பான மேனரிசங்களால் செம்ம கலக்கி எடுத்துள்ளார். குடும்பக் குழப்பங்களுக்கு நடுவே அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் மற்றும் வசன உச்சரிப்புகள் ஒவ்வொன்றும் தியேட்டரில் சிரிப்பலைகளைப் பரப்புகின்றன.
பிரபு குடிப் பழக்கத்தால் குடும்பத்தை இழந்த ஏக்கத்தையும், மகளின் மீது கொண்ட பாசத்தையும் தன் எழில்மிகு நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். தவறை உணர்ந்து கலங்கும் இடங்களில் இளைய திலகம் எனத் தமக்கு உள்ள பெயருக்கு ஏற்ப ஒரு அழுத்தமான பதிவைச் செய்துள்ளார்.
மயிலின் நண்பனாக வரும் ஆதித்ய கதிர் மற்றும் குரேஷி ஆகியோர் டைமிங் கவுன்ட்டர்கள் மூலம் சிரிப்புக்கு கேரண்டி தருகின்றனர். விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், காவ்யா அறிவுமணி, மிர்ச்சி கெமி என அனைவரும் கொடுக்கப்பட்ட இடங்களில் சரியான அளவில் தங்கள் பங்களிப்பைச் செய்து திரைக்கு வண்ணம் சேர்த்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “‘ரசகுல்லா’, ‘குடிகார நெஞ்சு’ போன்ற துள்ளலான பாடல்கள் மூலமும், உணர்ச்சிகரமான இடங்களில் இதமான பின்னணி இசையாலும் ரசிகர்களுக்குப் பொன்னான தருணத்தை உருவாக்கித் தந்துள்ளார்; படத்தின் ஒவ்வொரு சூழலையும் தனது ஆழமான இசைக் கோர்வையால் மெருகேற்றி, ஆல்பமாகவும் பின்னணி இசையாகவும் அளப்பரிய மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.”
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா சென்னை நகரம் மற்றும் கிராமத்துக் காட்சிகளை யூதப்பியுள் அண்டு மாடர்ன் ஸ்டைல் கலவையில் இயற்கை அழகு துள்ளும் வண்ணமயமாகப் படமாக்கியுள்ளார்; ஒவ்வொரு சட்டத்திலும் பிரகாசமான வெளிச்சத்தையும் நேர்த்தியையும் கொண்டுவந்து, பார்வையாளர்களைக் கட்டிப்போடும் ஒரு கண்கவர் திரை அனுபவத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.”
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் முதல் பாதியின் விறுவிறுப்பான நகைச்சுவைக் காட்சிகளை மிகச் சரியான வேகத்தில் கத்தரித்து சுவாரசியப்படுத்தியுள்ளார்; இரண்டாம் பாதியில் சில குடும்பக் காட்சிகள் சற்று நீளமாகச் சென்றாலும், கதையின் இலகுவான மனநிலை மாறாமல் சீராக நகர்த்துவதில் படத்தொகுப்பாளரின் அசுர முயற்சிகளும் பூரண நம்பிக்கையும் தெளிவாகத் தெரிகிறது.
கலை இயக்குனர் கண்ணன்.எஸ், உழைப்பு ஒவ்வொரு காட்சிக்கும் உயிரூட்டி, திரையில் ஒரு அழகிய தோற்றத்தைக் கொண்டு வந்ததில் இவரின் உழைப்பு நன்கு தெரிகிறது.
90-களின் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சுந்தர் சி பாணி குடும்பக் கதையைத் தற்கால நவீன சூழலுக்கு ஏற்பத் தீர்க்கமான ஆயத்தத்துடன் வடிவமைத்து, மனதை மயக்கும் ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர்; விஷ்ணு எடவன். கதாபாத்திரங்களின் பின்னணியை அழகியல் உணர்வுடன் பிணைத்து, சிறிய உணர்ச்சிகளையும் நேர்மையுடன் திரையில் கொண்டு வந்திருப்பது இவருடைய கனவும் தீர்க்கதரிசனமும் நனவானதைக் காட்டுகிறது.
பழைய பாணி குடும்ப நாடகத்திற்குள் டிரெண்டிங் காமெடியைக் கலந்து, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரையரங்கம் செல்வவோருக்கு ‘ஹாய்’ ஒரு திருப்திகரமான ஃபீல்-குட் என்டர்டெயினர்.