குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீடு இருக்கக்கூடாது, என்பதை வலுவாக அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் சொல்லும் படம்தான் இந்த கட்டா குஸ்தி 2,
இந்த கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நகர்கிறது, குழந்தை பிறந்த பிறகும் குஸ்தி விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவரது கணவர் விஷ்ணு விஷால் முழு ஆதரவாக இருக்கிறார் ,ஐஸ்வர்யா லட்சுமியை தேசிய அளவிலான விளையாட்டு க்கான போட்டிகளில் தயார் படுத்துகிறார்,

வீட்டையும் குழந்தையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் கவனித்துக் கவனித்துக் கொள்ளும் நல்ல கணவனாக விஷ்ணு விஷால்,கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) சர்வதேச அளவிலான குஸ்தி போட்டிகளில் கவனம் செலுத்தி, அரசாங்க வேலையிலும் பிஸியாக இருக்கிறாள். வீரா (விஷ்ணு விஷால்) எந்த ஈகோவும் இல்லாமல் ஒரு பொறுப்பான ‘ஹவுஸ் ஹஸ்பண்டாக’ மாறியிருக்கிறான். காலையில் சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது மற்றும் தங்களின் 6 வயது மகள் மதி மலரை (சாரா ஜைனா) பள்ளிக்கு அனுப்புவது என ஒட்டுமொத்த குடும்பப் பொறுப்பையும் அவனே சுமக்கிறான். கீர்த்திக்கு மேட்ச் நடக்கும் போது அவளுக்கு ஜூஸ் கொண்டு போய் தருவது, அவளது வெற்றியை மேடையில் நின்று கொண்டாடுவது என ஒரு சிறந்த கணவனாக வலம் வருகிறான். முதல் பாதியில் வீரா ஹவுஸ் ஹஸ்பண்டாக கலகலப்பாக வலம் வந்தாலும், இடைவேளையை நெருங்கும் போது இவர்களது 6 வயது மகள் மதி மலரின் எதிர்காலம் குறித்து தம்பதியினரிடையே பெரிய கருத்து வேறுபாடு வெடிக்கிறது.மல்யுத்த வீராங்கனையான கீர்த்தி, தன் மகளையும் தன்னைப்போல ஒரு சாம்பியன் குஸ்தி பிளேயராக மாற்ற வேண்டும் என்று தீவிரமாக ஒற்றைக்காலில் நிற்கிறாள். இதற்காக சிறுமிக்குக் கடுமையான குஸ்தி பயிற்சிகளையும் தருகிறாள். ஆனால், மகள் மதி மலருக்கோ நடனத்தின் மீதுதான் அதீத ஆர்வம் இருக்கிறது. தந்தை வீரா, மகளின் விருப்பத்திற்கு ஆதரவாக நின்று, அவள் நடனத்திலேயே சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த “குஸ்தியா அல்லது டான்ஸா என்ற மாறுபட்ட எண்ணம் இவர்களது மகிழ்ச்சியான குடும்பத்தில் மெதுவாக விரிசலை உண்டாக்குகிறது. இன்னொரு பக்கம், சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கீர்த்தியின் அசாத்திய வளர்ச்சியைக் கண்டு அவளது புதிய குஸ்தி பயிற்சியாளர் (தாரக் பொன்னப்பா) தீவிர பொறாமை கொள்கிறான். அவளது கரியரை அழிக்க ஒரு கொடூரமான சதி வலை பின்னுகிறான். இந்த சதிவலையில் வீராவை மாட்டி விட்டு ஆயுர்வேத மருந்து என்று ஊக்க மருந்து கலந்து கொடுக்க வைக்கிறான் கோச். எதிர்பாராதவிதமாக அந்தப் போட்டியில் கீர்த்தி தோற்றுப் போவதுடன், போட்டிக்குப் பின் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் அவளது ரத்தத்தில் ஊக்கமருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவளுக்குத் ஒரு வருட காலம் தடையும் விதிக்கப்படுகிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து கீர்த்தி மீள்வதற்குள், ஏற்கனவே மகளின் விஷயத்தில் வீரா மீது கோபத்தில் இருக்கும் கீர்த்தி, தன் கணவனே தன் லட்சியத்திற்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி ஆத்திரமடையும் கீர்த்தி, விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடுகிறாள்; மகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் செல்கிறாள். தன் மீது விழுந்த துரோகி என்ற பழியைத் துடைக்கவும், தான் நிரபராதி என்பதைத் தன் மனைவிக்கு உணர்த்தவும் வீரா களமிறங்குகிறான். வில்லன் கோச்சின் பின்னால் இருக்கும் சதிகளையும், உண்மையான குற்றவாளி யார் என்பதையும் வீரா தனது எதார்த்தமான பாணியில் புலனாய்வு செய்து எப்படி ஆதாரங்களுடன் நிரூபிக்கிறான்? அதன் பிறகு கீர்த்தி தன் தவறை உணர்ந்து எப்படி வீராவுடன் இணைகிறாள்? என்பதே ‘கட்ட குஸ்தி 2’ படத்தின் விறுவிறுப்பான எமோஷனல் மற்றும் ஹியூமர் கலந்த கிளைமாக்ஸ் ஆகும்!

முந்தைய பாகத்தில் ஒரு பக்கா கிராமத்து ஆணாதிக்கவாதியாக வலம் வந்த விஷ்ணு விஷால், இந்த சீக்வெலில் அதற்கு நேர்மாறான, மிகவும் அடக்கமான ஒரு ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ கேரக்டரை ஏற்று தனது பன்முகத்தன்மையை நிரூபித்துள்ளார். பொதுவாக சீரியஸ், ஸ்போர்ட்ஸ், அல்லது சைக்கோ த்ரில்லர் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்ணு விஷால், இந்த முறை முழுநீளக் காமெடியைக் கையில் எடுத்து ஸ்கோர் செய்துள்ளார். வீட்டில் சமையல் செய்வது, அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு ஏரோபிக்ஸ் கிளாஸ் எடுப்பது, அவர்களுக்கு சமையல் மற்றும் வீட்டு உபயோக டிப்ஸ் கொடுப்பது என படம் முழுக்க கலகலப்பான உடல்மொழியைக் காட்டியுள்ளார். குறிப்பாக, தன் 6 வயது மகளுடன் சேர்ந்து வரும் அந்த “அப்படி போடு” டான்ஸ் டிராக் மற்றும் பள்ளி ஆசிரியையுடன் அவர் செய்யும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகின்றன.
படம் வெறும் காமெடியோடு மட்டும் நின்றுவிடாமல், இடைவேளைக்குப் பிறகு தீவிரமான எமோஷனல் டிராமாவுக்கு மாறும் போது விஷ்ணு விஷாலின் முதிர்ந்த நடிப்பு வெளிப்படுகிறது.தன் மனைவியின் மல்யுத்த லட்சியத்திற்கும், மகளின் நடனக் கனவிற்கும் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு தற்காலத் தந்தையின் வலியை மிக நுணுக்கமாகக் கடத்தியுள்ளார். வில்லன் கோச்சின் சதியால் மனைவி தன் மீது துரோகி என்ற பழியைப் போடும் போது, ஆத்திரப்படாமல், உடைந்து போகும் ஒரு அப்பாவியாக அவரது நடிப்பு பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறுகிறது. மனைவியுடன் குஸ்தி ரிங்கிற்கு உள்ளே அவர் சண்டை போடும் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளில், தனது அசல் ‘மாஸ்’ இமேஜை மீட்டெடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறார். தன் மீதான பழியைத் துடைக்க அவர் எடுக்கும் அந்த எதார்த்தமான ‘புலனாய்வு’ பாணி காட்சிகள் அவரது கதாபாத்திரத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. தன் மாஸ் ஹீரோ இமேஜை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, ஒரு சிறந்த கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும், அதே சமயம் அட்டகாசமான காமெடி டைமிங் நடிகராகவும் விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தில் தனது கரியரின் மிகச் சிறந்த மற்றும் புது உத்வேகத்துடன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!முதல் பாகத்தில் அடக்கமான கிராமத்துப் பெண்ணாக நடிக்கக் கஷ்டப்பட்டு, பின் அதிரடி காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி, இந்த சீக்வெலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சர்வதேச அளவிலான ‘மல்யுத்த வீராங்கனை’ என்ற கம்பீரமான பாத்திரத்தில் முத்திரை பதித்துள்ளார்.ஒரு மல்யுத்த வீராங்கனைக்குத் தேவையான அந்த ஆக்ரோஷமான உடல்மொழி, தீர்க்கமான பார்வைகள் மற்றும் ரிங் சண்டைக் காட்சிகளில் அசல் வீராங்கனையைப் போன்ற உழைப்பை ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்துள்ளார். முதல் பாதியில் கணவன் வீரா ஜூஸ் தூக்கிக் கொண்டு வர, இவர் கம்பீரமாக மேடையில் ஏறும் ‘ரோல்-ரிவெர்சல்’ காட்சிகளில் செம்ம மாஸாகத் திரையில் வலம் வருகிறார்.இரண்டாம் பாதியில் கதை தீவிரமடையும் போது, தன் மகளின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் ஒரு கண்டிப்பான தாயாக நின்றுகொண்டு, அவளையும் குஸ்தி பிளேயராக மாற்ற அவர் பிடிவாதம் பிடிக்கும் இடங்கள் மிகவும் எதார்த்தமானவை. வில்லன் கோச்சின் சதியால், தன் லட்சியத்தின் மீது விழும் ஊக்கமருந்துப் பழியால் நிலைகுலைந்து, தன் வாழ்வாதாரமே பறிபோகும் போது அவர் காட்டும் அந்த அழுகையும் பயமும் பார்வையாளர்களைக் கலங்க வைக்கிறது.தன் கணவனே தன் லட்சியத்திற்குத் துரோகம் செய்துவிட்டான் என்று வில்லன் ஜோடித்த ஆதாரங்களை நம்பி, ஏமாற்றத்தின் உச்சத்துக்கே செல்லும் இடங்கள் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்புத் திறனுக்குச் சான்று. விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் அவர் பேசும் உணர்வுபூர்வமான வசனங்களும், விஷ்ணு விஷாலைப் பார்த்து அவர் காட்டும் அந்த ஆத்திரமும், பின் உண்மையை உணர்ந்து உருகும் கிளைமாக்ஸ் காட்சிகளும் படத்திற்குப் பெரும் எமோஷனல் வெயிட்டேஜ் சேர்த்துள்ளன.; ஐஸ்வர்யா லட்சுமி வெறும் ஹீரோயினாக மட்டும் வந்து போகாமல், கதையின் மையப்புள்ளியாக நின்று, ஒரு வீராங்கனையின் கம்பீரத்தையும், ஏமாற்றப்பட்ட ஒரு மனைவியின் எமோஷனல் கோபத்தையும் மிக முதிர்ச்சியுடன் திரையில் செதுக்கியுள்ளார்!மிகப்பெரிய சர்ப்ரைஸ் மற்றும் ‘ஷோ-ஸ்டீலர்’ குழந்தை நட்சத்திரம் சாரா ஜைனா தான். விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியின் மகளான ‘மதி மலர் பாத்திரத்தில் அவரது அலாதியான நடிப்பும், பெற்றோர்களின் கனவுகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு 6 வயது சிறுமியின் மனநிலையை, தனது மழலை மாறாத எதார்த்தமான நடிப்பின் மூலம் திரையில் மிக அழகாகக் கடத்தியுள்ளார் சாரா ஜைனா.படத்தின் முதல் பாதி முழுக்க விஷ்ணு விஷாலுக்கும் இவருக்குமான அந்த தந்தை-மகள் பாசம் தான் கதையின் மிக அழகான பகுதி. காலையில் அப்பாவிடம் அடம் பிடிப்பது, ஸ்கூலுக்கு கிளம்பும் போது செய்யும் குறும்புகள் மற்றும் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து அவர் பாடும் பாடல் மற்றும் டான்ஸ் மூவ்களில் அவரது க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் தியேட்டரில் ரசிகர்களின் மனதை அள்ளுகின்றன.அம்மா ஐஸ்வர்யா லட்சுமி தன்னை ஒரு குஸ்தி பிளேயராக மாற்ற வேண்டும் என்று கடுமையான உடற்பயிற்சிகளைத் தரும்போது, அதற்குப் பயந்துகொண்டே, தனக்கு விருப்பமான நடனத்தின் மீது காட்டும் அந்த ஆர்வம் அலாதியானது.நடன வகுப்பில் அவர் ஆடும் போது முகத்தில் காட்டும் அந்த சந்தோஷமும், அம்மாவிடம் மாட்டிக்கொள்ளும் போது காட்டும் அந்த அப்பாவித்தனமான பயமும் ஒரு தேர்ந்த குழந்தை நட்சத்திரத்திற்கான அடையாளம்.இரண்டாம் பாதியில் பெற்றோர்களுக்கு இடையே ஈகோ முரண்பாடுகள் வெடித்து, அம்மா தன்னை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது சாரா ஜைனாவின் நடிப்பு பார்வையாளர்களைக் கலங்க வைக்கிறது.நீதிமன்றக் காட்சிகளிலும், அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்ளும் போது ‘எனக்கு அம்மாவும் வேணும், அப்பாவும் வேணும்” என்று அவர் ஏங்கும் இடங்கள் படத்திற்குப் பெரும் எமோஷனல் வெயிட்டேஜ் சேர்த்துள்ளன. சாரா ஜைனா வெறும் ஒரு க்யூட் குழந்தையாக மட்டும் வந்து போகாமல், கதையின் முக்கிய புள்ளியாக இருந்து, படம் பார்ப்பவர்களின் மனதைக் கவரும் ஒரு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!
ரம்யா கிருஷ்ணன் சிறப்புத் தோற்றத்தில் நீதிபதியாக வந்து இரண்டாம் பாதியில் வரும் குடும்ப நீதிமன்ற காட்சிகளில் என்ட்ரி கொடுத்து தியேட்டரை அதிர வைக்கிறார்.தனது வழக்கமான கம்பீரமான உடல்மொழியுடனும், நக்கலான வசன உச்சரிப்புடனும் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு இடையே நடக்கும் ஈகோ சண்டையைத் தீர்க்க முயலும் காட்சிகள் அற்புதம்.படத்தின் எமோஷனல் சூழலுக்குத் தனது ஸ்டார் பவர் மூலம் ஒரு பெரிய வெயிட்டேஜ் கொடுத்துள்ளார்.
இறுதி குஸ்தி போட்டி நடக்கும் இடத்தில் ஒரு தற்காலிக நடுவராக வந்து ஒன்-லைனர்களால் தியேட்டரைச் சிரிக்க வைக்கிறார்.விஷ்ணு விஷாலை பார்த்து அவர் அடிக்கும் கவுண்ட்டர்களும், தனது அசல் பாணி டைமிங் காமெடியும் படத்தின் தீவிரமான இரண்டாவது பாதியில் ரசிகர்களுக்கு ஒரு செம்ம ரிலீஃப்பாக அமைகிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகத்திலும் வீராவின் ஆணாதிக்க மாமா ரத்தினமாக வந்து அசத்தியுள்ளார் கருணாஸ். பொம்பள சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறான் என்று வீராவை ஏளனம் செய்யும் காட்சிகளிலும், தன் மனைவியை நிற்க வைத்து விட்டு கிராமத்து பஞ்சாயத்துகளிலும் நெளியும் போதும், அதன் பின் மனைவியிடம் அடங்கி நடக்கும் அவரது எதார்த்தமான காமெடி நடிப்பு அருமை.பழைய சிந்தனைகளைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கிராமத்து மனிதனின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்து, கதையின் முதல் பாதி முரண்பாடுகளுக்கு வலு சேர்த்துள்ளார்.
‘மீனு டீச்சர்’ கதாபாத்திரத்தில் வரும் மோக்ஷா, வகுப்புஆசிரியையாக வந்து அந்த நடன சார்ந்த காட்சிகளுக்கு தனது துடிப்பான நடிப்பு மற்றும் நடன அசைவுகள் மூலம் துள்ளலுடன் பக்கபலமாக நின்றுள்ளார்.
இவர்களுடன் கீர்த்தியின் சித்தப்பாவாக வரும் முனிஷ்காந்த், வழக்கறிஞர் சட்டநாதனாக வரும் காளி வெங்கட் மற்றும் டிடிஆர் பார்த்தாவாக வரும் கருணாகரன் டைமிங் கவுண்ட்டர்கள் என அனைவரும் தங்களின் பாத்திரங்களைச் செதுக்கி, படத்தை ஒரு முழுமையான குடும்பக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்!கட்ட குஸ்தி 2’ திரைப்படத்தின் கேப்டனாக நின்று, கதையையும் திரைக்கதையையும் வழிநடத்திய இயக்குநர் செல்லா அய்யாவு அவர்களின் அசாத்திய உழைப்பு மற்றும் திரைக்கதை உத்திகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் போது இருக்கும் ‘சீக்வெல் பிரஷரை” மிகவும் சாதுரியமாகக் கையாண்டு, அதில் முழுமையாக வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் செல்லா அய்யாவு. முதல் பாகத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளை உடைத்தவர், இந்த இரண்டாம் பாகத்தில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஒரு மாஸ் ஹீரோவை முழுப் படத்திலும் ‘ஹவுஸ் ஹஸ்பண்டாக’க் காட்டி, சமையல் செய்வது, குழந்தையைப் பார்ப்பது என எவ்வித ஈகோவும் இல்லாத ஒரு கணவனின் பாத்திரத்தை வடிவமைத்த இடத்திலேயே இயக்குநராக செல்லா அய்யாவு தனித்து நின்று 2026-க்கு ஏத்த மாதிரி ஒரு மாடர்ன் டச்சோடு, முற்போக்கு சிந்தனையோடு இயக்கியுள்ளார். முதல் பாதியின் திரைக்கதையை அசல் ஹியூமர், தந்தை-மகள் பாசம் மற்றும் கவுண்ட்டர்களால் மிகவும் கலகலப்பாகவும், துடிப்பான வேகத்திலும் நகர்த்தியுள்ளார். பெற்றோர்கள் தங்களின் லட்சியங்களையும் கனவுகளையும் குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது என்ற மிக முக்கியமான மெசேஜை திரைக்கதையின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளார்.வில்லன் கோச்சின் ஊக்கமருந்து சதி, அதைத் தொடர்ந்து வரும் விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் ஆக்ஷன் பிளாக் என திரைக்கதையில் எமோஷனல் மற்றும் கமர்ஷியல் எலிமெண்ட்டுகளை மிகச் சரியாகப் பேலன்ஸ் செய்துள்ளார்.விஷ்ணு விஷாலின் அசல் இமேஜை உடைத்து அவரிடம் இருக்கும் காமெடி டைமிங்கை முழுமையாக வெளிக்கொண்டு வந்ததும், ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஒரு அழுத்தமான விளையாட்டுப் பெண் பாத்திரத்தைக் கொடுத்து அவருக்கு முழு திறமையை வெளிப்படுத்தியதும் இவரின் இயக்கத்திற்குச் சான்று.அதேபோல, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற பெரிய நட்சத்திரங்களின் கேமியோக்களைக் கதையோடு மிகச் சரியாகப் பொருத்தி, தியேட்டர் மொமண்ட்டுகளை உருவாக்கியுள்ளார்.இயக்குநர் செல்லா அய்யாவு வெறும் கமர்ஷியல் மசாலா படமாக மட்டும் இதை எடுக்காமல், ‘குழந்தைகளின் விருப்பம்’, ‘தம்பதிகளுக்கு இடையேயான புரிதல்’ , தம்பதிகளிடம் பிளவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதர் தலையீடல் இருக்கக்கூடாது, அவர்களே சரி செய்து கொள்வார்கள் போன்ற ஆழமான சமூகக் கருத்துக்களை, தனது சுவாரசியமான திரைக்கதை மற்றும் கலகலப்பான இயக்கத்தில் ‘கட்ட குஸ்தி 2’ திரைப்படத்தை ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக மாற்றியுள்ளார்!மொத்தத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் கட்டா குஸ்தி 2 குடும்பத்தை பிரிக்கும் சதியையும், பழியையும் முறியடிக்கும் கணவனின் ஆக்ரோஷ மாஸ் கலந்த குஸ்தி ட்ரீட்டை ரசிக்கலாம் கலகலப்பில் மகிழலாம்.