Take a fresh look at your lifestyle.

ஒன்ஸ் மோர் சினிமா விமர்சனம் :

10

நடிகர்கள்:-
அர்ஜுன் தாஸ் – ரகுவரன்
அதிதி சங்கர் – அஞ்சலி
சோனா ஒலிக்கல் – இந்திரா வாசுதேவன்
டிராவிட் செல்வம் – இப்ராஹிம்
அனுஷா பிரபு – சாரா
ஜகபர் – கீகீ
மோனிஷ் எலமாரன் – ஸ்ரீநாத்
வர்ணிகா வரத் – வர்ணிகா
பிலிப்சன் தாமஸ் – பிலிப்
அருண்குமார் மணி – முத்து
சௌந்தர்யா மனோகரன் – சௌந்தர்யா
கண்ணன் டி – திவாகர்
ரிச்சி ரிச்சர்ட்சன் – கெவின்
ரக்ஷா செரின் – அனு
ஸ்ரீகாந்த் – மோஜ்
நியாஸ் முஹம்மது – நியாஸ்
சித்ரா லட்சுமணன் – பாடக லிங்கம்
தேவதர்ஷினி சேதன் – தெரபிஸ்ட் லாவண்யா
ஜென்சன் திவாகர் – ஃபாதர் எட்வின்
தயாளன் – ரகுவின் தந்தை
மகேஸ்வர் – அஞ்சலியின் தந்தை
ரமா ராஜேந்திரா – ரகுவின் தாய்
லட்சுமி சரவணன் – அஞ்சலியின் தாய்
சுதர்சன் காந்தி – குருபரன்
ஆரீஷ் – கிக்கியின் காதலன்
குட்நைட் ஆர். நாகராஜன் – குமரன்
ரித்திக் கிருஷ்ணா – கேரளா தன்னார்வலர்
பூஜா சுரேந்தர் – இந்திராவின் தாய்
நிர்மல் குமார் – இந்திராவின் தந்தை
அபிரா பிரவீன் – இளம் இந்திரா
ஹரிகுமார் – மெக்கானிக்
சோமசூர்யா – உதவி மெக்கானிக்
தொழில்நுட்பக் குழு:-
எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
தயாரிப்பாளர் : யுவராஜ் கணேசன்
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
ஓளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டர்: நாஷ்
கலை : ராஜ் கமல்
பாடல் வரிகள்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், எம்.சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்
நடன இயக்குனர்: அப்சர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

காதல் அளித்த வடுவோடு, மன அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தன் உணர்வுகளைப் பூட்டி வைத்துள்ள சிவில் என்ஜினீயர் ரகுவரன் (அர்ஜுன் தாஸ்). மனநல ஆலோசகர் லாவண்யாவிடம் (தேவதர்ஷினி) தனது சோகத்தையே கம்பெஃட் சோனாக மாற்றிக் கொண்டவர். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் பைக் பழுதாகி நிற்கும் சூழலில், கல்லூரி ஜூனியர் அஞ்சலி (அதிதி சங்கர்) தனது காரில் லிஃப்ட் தருகிறார். கண்டதும் காதலைச் சொல்லும் அதிதியின் துறுதுறுப்பும், துரத்தித் துரத்தி காதலிக்கும் பிடிவாதமும் மெதுவாக அர்ஜுனின் காயங்களை ஆற்றத் தொடங்குகின்றன. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹாசினி பாணியிலான அஞ்சலியின் தூய்மையான அன்பு அர்ஜுனின் இதயத்தை வெல்கிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண வரவேற்பு வரை கதை மிக அழகாக நகர்கிறது. ஆனால், திருமண வரவேற்பு விழாவின் போது வரும் அந்த ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது! அர்ஜுனின் பழைய காதலி இந்திரா (சோனா ஒலிக்கல்) மீண்டும் அவர் வாழ்க்கைக்குள் நுழைகிறார். கல்லூரிப் பருவத்தில் ஏற்பட்ட காதல், இந்திராவின் கமிட்மென்ட் பயம், மற்றும் அதனால் ஏற்பட்ட பிரிவின் நினைவுகள் மீண்டும் வந்து அர்ஜுனைத் தீவிரக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன. இந்திரா யார்? அவர் மீண்டும் வந்தது ஏன்? கடந்த கால நினைவுகளிலேயே அர்ஜுன் தேங்கி நிற்கிறாரா அல்லது நிகழ்கால அன்பான அதிதியைத் தேர்ந்தெடுக்கிறாரா? அதிதியின் நிலைமை என்ன ஆனது? என்பதைப் புதிய உணர்வுகளோடும் முதிர்ச்சியான அணுகுமுறையோடும் விவரிக்கிறது மீதிக்கதை.

காதல் தவிப்பு, கடந்த கால காயங்கள் மற்றும் மன அழுத்த உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கும் அர்ஜுன் தாஸ், இயக்குனர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி, கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். தனது வழக்கமான கம்பீரமான குரலாலும், தாடியுடனான கோபமான மற்றும் சோகமான பார்வைகளாலும் ரகுவரன் கதாபாத்திரத்திற்குத் தேவையான எட்ஜ் கொடுத்து சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்; குறிப்பாக காதல் குழப்பத்தில் அவர் தவிக்கும் இடங்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

அதிதி சங்கர் படம் முழுவதும் ஒரு சூரிய வெளிச்சம் போலத் துறுதுறுப்பாக வந்து, புன்னகையாலும் துள்ளலான கரிஷ்மாவாலும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் அதிதி சங்கர், குடும்பபாங்கான மற்றும் நவீன பெண்களின் அடையாளமாகத் திகழ்கிறார். தன் முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் காட்டியுள்ள முதிர்ச்சியும் நுனுக்கமாக வெளிப்படுத்திய உணர்வுகளும் வியப்பாக உள்ளது; அர்ஜுனைத் துரத்தித் துரத்தி காதலிக்கும் காட்சிகளிலும், “நான் உன்னை நேசிப்பதை நீ மதிப்பதைப் போல, என் காதலையும் மதி” எனப் பேசும் இடங்களிலும் நேர்த்தியாக நடித்து தன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

அர்ஜுனின் கடந்த காலக் காதலியாக வரும் சோனா ஒலிக்கல், தனது அழகாலும் இயல்பான தோற்றத்தாலும் காட்சிகளுக்குக் கூடுதல் ஈர்ப்பு சேர்க்க முயன்றுள்ளார். எனினும், இரண்டாம் பாதியில் அவரது கதாபாத்திரத்தின் எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, சில இடங்களில் அவரது உணர்ச்சியற்ற நடிப்பு லேசான சலிப்பை ஏற்படுத்துகிறது.

டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜென்சன் திவாகர், தேவதர்ஷினி மற்றும் சித்ரா லட்சுமணன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து, இயல்பான நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கதை நகர்வுக்கு கச்சிதமாக உதவியுள்ளனர்; குறிப்பாக பாலின ஈர்ப்பு மற்றும் மாற்றுப் பாலினக் காதலைப் பற்றிய உரையாடல்களை அர்ஜுன் தாஸ் கையாளும் இடங்களில் துணை நடிகர்களின் பங்களிப்பு பார்வையாளர்களிடம் நேர்மறை வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு உயிரூட்டி, ஒவ்வொரு காட்சியிலும் காதல் உணர்வை அற்புதமாக கூட்டியுள்ளது ஹேஷாம் அப்துல் வஹாபின் பின்னணி இசையும் பாடல்களும். ‘எதிரா புதிரா’ போன்ற மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளதோடு, படத்தின் ரொமான்ஸ் மற்றும் எலகன்ஸ்ஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, பார்வையாளர்களின் இதயங்களை நிச்சயம் வெற்றி பெறும் வகையில் இசையமைத்துள்ளார்.

சென்னை மாநகரத்தின் பரபரப்பையும், சென்னை மூர் மார்க்கெட், சர்ச் போன்ற இடங்களில் உள்ள ரொமான்டிக் சூழலையும் பெர்ஃபெக்ட்டா கேப்சர் செய்து துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். அழகிய வண்ணக் கோணங்கள் மற்றும் லைட்டிங் மூலமாக ஒவ்வொரு காட்சியின் மூடையும் மிகச் சரியாகப் பிரதிபலித்து, காட்சி அமைப்புகளுக்கு மகத்தான பலம் சேர்த்துள்ளார்.

முதல் பாதியை விறுவிறுப்பாகவும், எந்தவிதத் தொய்வும் இல்லாமல் கொண்டு சென்ற எடிட்டர் நாஷ், இரண்டாம் பாதியில் வரும் நீளமான உரையாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூர்மையான கத்தரியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

சென்னையின் பழமையான மற்றும் நவீன இடங்களை இயல்பாக வடிவமைத்த ராஜ் கமலின் கலை இயக்கமும், காட்சியின் அமைதியை மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களைப் பதற்றமாக மாற்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் ரஞ்சித் வேணுகோபால் – எம்.சரவண குமாரின் ஒலி வடிவமைப்பும் திரைப்படத்திற்கு மேலும் உயிரோட்டம் அளித்துள்ளன.

முன்னாள் காதலின் காயத்தையும் புதிய காதலின் சுகத்தையும் ஒரே தட்டில் பரிமாறும் புதுமையான முயற்சியைக் கையாண்ட விதம் அருமை எனப் பாராட்டும் வகையில், இளமை உணர்வையும் நவீன பாணியையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்தின் மேக்கிங். காதல் மற்றும் மனித உணர்வுகளின் சிக்கல்களைப் பேசும் இத்திரைக்கதையில், முதல் பாதியை மிகவும் அழகாகவும், மெதுவாக மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் பாணியிலும் அற்புதமாக இயக்கி வெற்றி பெற்றுள்ள இயக்குனர், இரண்டாம் பாதியில் உள்ள சில தேவையற்ற வசனங்கள் மற்றும் மெதுவான கதைநகர்த்தலைக் கத்திரித்து மெருகேற்றி இருக்கலாம் என்ற குறை இருந்தாலும், ஒரு நவீன முதிர்ந்த காதலை நேர்த்தியாக வழங்கி கட்ஸ் காட்டியுள்ளார்.