நடிகர்கள் :- ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன்,கருடா ராம், சத்யன், ஸ்ரீPமன், ஆதியா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.பிவி பிரேம்ஸ் சார்பில் பிவி ஷர்மிளா வழங்கும் சட்டென்று மாறுது வானிலை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம் நாதன், இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டிங்: டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்குனர்: கண்ணன்,சிஎஃஓ: சத்தியநாராயணன் ஆர், சண்டை: முரளி ஜி, ஆடை வடிவமைப்பாளர்: கமலி எஸ், ஒலி வடிவமைப்பு கலவை: தபஸ் நாயக், பாடல் வரிகள்: ‘மகாகவி’ பாரதியார் சினேகன், கிரிஷ் ஜி மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா, பாடியவர்கள்: ‘தேனிசை தென்றல்’ தேவா, ஸ்ரேயா கோஷல், ஜெய்ராம் பாலசுப்ரமணியம், மதுரை சோல்ஜர்ஸ், கிரிஷ் ஜி மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா, நடனம்: சாண்டி, டிஐ: இன்ஃபி நிட்டி மீடியா, ஸ்டில்ஸ்: ஜெய்குமார் வைரவன், ஆடை வடிவமைப்பாளர் : பெருமாள் செல்வம், ஒப்பனை: அப்துல் ரசாக், தயாரிப்பு நிர்வாகிகள்: திண்டுக்கல் வி சிவராமன், பிஆர்ஒ: சதீஷ்AIM

IT கம்பெனியில் பணிபுரியும் ராமச்சந்திரன் சென்னையில் வசிக்கும் ஒரு அனாதை இளைஞன். அவனது வாழ்வில் எந்த லட்சியமும் இல்லாத சூழலில், எதிர்பாராத ஒரு நாளில் ஜானகியை (மீனாட்சி கோவிந்தராஜன்) பார்கிறான். ஜானகி, தமிழகத்தின் அதிகாரமிக்க ஒரு அரசியல் அமைச்சரின் மகள். அவளது வீட்டில் அவளது விருப்பத்திற்கு மாறாக, மிகந்த செல்வாக்குமிக்க அரசியல்வாதிக்கு இரண்டாம் தாராமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனை எதிர்க்கும் தாயும் இறந்து போக, அந்த அரசியல் மற்றும் கட்டாயத் திருமணச் சூழலில் இருந்து தப்பிக்க, ஜானகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பணக்கார நண்பரின் வழிகாட்டுதலின்படி பெண்கள் விடுதியில் தங்கி வேலை தேடுகிறாள்.ஆனால் அந்த பணக்கார நண்பரின் சுயரூபம் தெரிந்து விலகும் நேரத்தில் எதிர்பாராமல் சந்திக்கும் ராமச்சந்திரனின்; எளிய குணமும், அவனது நேர்மையும் ஜானகிக்குத் துணையாகத் தோன்றுகிறது. இருவருக்கும் இடையே காதல் மலர, அமைச்சரான அவளது தந்தை தங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பமாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், ஜானகி நினைத்தது போல நடுத்தர வர்க்க வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. ஜானகியின் தந்தை, தனது அரசியல் கௌரவத்திற்காகவும், வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டும், தனது ஆட்களை வைத்து மகளையும் மருமகனையும் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறார். காதல் தம்பதியினர் கொடைக்கானலில் உள்ள ரிசார்ட்டில் தேனிலவு கொண்டாடச் செல்கின்றனர். அந்த பெரிய சொகுசு ஹோட்டல் மற்றும் ரிசார்ட் நடத்தி வரும் சக்கரவர்த்தி (கருடா ராம்) பணத்திற்காக பல சட்ட விரோத செயல்களை செய்யும் மோசடி நபர். அமைதியான சூழலாகத் தெரியும் அந்த ரிசார்ட்டிற்குள் நுழைந்த பிறகுதான், அதன் உரிமையாளரான சக்கரவர்த்தியின் கொடூரமான முகமும், அந்த ஹோட்டலுக்குப் பின்னால் நடக்கும் சில சட்டவிரோத ரகசியங்களும் ராமசந்திரனுக்;குத் தெரிய வருகின்றன.அமைச்சரின் ஆட்களிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் இளம் தம்பதியினர், எதிர்பாராமல் கொடைக்கானல் ரிசார்ட் உரிமையாளரான சக்கரவர்த்தியின் சதி வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். ராமச்சந்திரன் வேலைஇழந்து ஒருபுறம் கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்க, மறுபுறம் மனைவியைத் தேடி வரும் அதிகாரமிக்க அரசியல்வாதி தந்தையின் துரத்தல், பழி தீர்க்க நினைக்கும் ஜானகியின் பணக்கார நண்பர் மற்றும் சக்கரவர்த்தியின் சதி வலை என்று பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்.இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து இந்த இளம் தம்பதியினர் எப்படித் தப்பிக்கிறார்கள், அவர்களின் காதல் இந்தச் சோதனைகளைக் கடந்து வென்றதா இல்லையா என்பதை விறுவிறுப்பான காதல் மற்றும் ஆக்ஷன் பின்னணியில் விவரிக்கிறது ‘சட்டென்று மாறுது வானிலை’.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ராமச்சந்திரனாக உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று படத்தின் முதல் பாதியில் வழக்கமான தனது எளிய, துள்ளலான காதல் நாயகன் பாணியில் கவரும் ஜெய், இரண்டாம் பாதியில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கணவனாகத் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும், நிதி நெருக்கடியால் தடுமாறும் எமோஷனல் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்துள்ளார்.
மீனாட்சி கோவிந்தராஜன் ஜானகியாக ஒரு அமைச்சரின் மகளுக்கே உரிய மிடுக்குடனும், காதலுக்காக அனைத்தையும் இழந்து நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குப் பழகும் பெண்ணாகவும் மீனாட்சி மிக நேர்த்தியான நடிப்பைத் தந்துள்ளார். ஜெய் உடனான இவரது கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரும் பலம்.
யோகி பாபு படத்தின் முதல் பாதியைத் தனது டைமிங் நகைச்சுவைகளால் சில இடங்களில் தாங்கிப் பிடிக்கிறார். கதையோடு பயணிக்கும் வில்லனாக வந்து பின்னர் உதவும் நண்பன் கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார்.சக்ரவர்த்தியாக கருடா ராம் இதில் மிரட்டலான வில்லனாக வந்து படத்திற்குத் தேவையான த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் அழுத்தத்தைக் கூட்டியுள்ளார்.
சத்யன், ஸ்ரீPமன் மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் கதையின் ஓட்டத்திற்குத் தேவையான இடங்களில் தோன்றி தங்களின் எதார்த்தமான நடிப்பால் பக்கபலமாக நின்றுள்ளனர்.
இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஸ்ரேயா கோஷல் பாடிய மெலடி பாடல் காதுகளுக்கு அற்புதம். பாரதியாரின் வரிகளால் ஈர்க்கப்பட்ட ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ மற்றும் ராப் இசை கலந்த பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது.
ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் மென்மையான வண்ணங்களையும், ஆக்ஷன் மற்றும் அரசியல் சதித் திட்டக் காட்சிகளில் அழுத்தமான லைட்டிங்கையும் பயன்படுத்தி படத்திற்கு ஒரு தரமான விஷவல் கொடுத்துள்ளார்.ஜெய்யின் உடல்மொழிக்கு ஏற்றவாறு, அதே சமயம் வில்லன் கருடா ராமின் மிரட்டலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் முரளி ஜி வடிவமைத்துள்ளார்.இயக்கம் பாபு விஜய்: திடீர் காதலால் இணையும் ஒரு எளிய இளைஞனும், அரசியல்வாதியின் மகளும், தங்களின் வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் அதிகாரமிக்க எதிரிகளைத் தங்களின் அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் எப்படி வெல்கிறார்கள் என்பதே இந்த ‘சட்டென்று மாறுது வானிலை’.ஒரு எளிய காதல் கதையை, அரசியல் மற்றும் குடும்பச் சிக்கல்களுடன் இணைத்து சுவாரஸ்யமான கமர்ஷியல் த்ரில்லராகக் கொடுத்துள்ளார் பாபு விஜய். முதல் பாதியில் காதலும், இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷனும் சரிவிகிதத்தில் கலந்து இயக்கியுள்ளார் பாபு விஜய்.
ரேட்டிங்: 2.5/5