Take a fresh look at your lifestyle.

பெத்தி சினிமா விமர்சனம்

9

விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்திருக்கும் பெத்தி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்க திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புச்சி பாபு சனா.

இதில் ராம் சரண்- பெத்தி, ஜான்வி கபூர் – அச்சியம்மா, சிவ ராஜ்குமார் – கௌர் நாயுடு, ஜகபதி பாபு – அப்பல சூரி, திவ்யேந்து சர்மா – ராம் புச்சி, பொமன் இராணி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவினர்கள் : இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா, இசை: ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு, தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா, படத்தொகுப்பு: நவீன் நூலி, நிர்வாக தயாரிப்பாளர்: ஏ.லு. பிரவீன் குமார், மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ, மக்கள் தொடர்பு : யுவராஜ்.

இந்தியாவின் ஒலிம்பிக் வீழ்ச்சிக்குப் பிறகு, விளையாட்டுத் துறை அதிகாரி பைஸ்வால் (போமன் இரானி) திறமையான கிராமிய வீரர்களைத் தேடி விஜயநகரம் வருகிறார். அங்கு பல விளையாட்டுக்களில் தனித்துவமான சாதனை படைத்துள்ள பெத்தியைப் பற்றித் தெரிகிறது. பெத்தி தனது அசாத்தியத் திறமையை வெறும் பணத்திற்காகவோ அல்லது தன் சுயநலத்திற்காகவோ பயன்படுத்தாமல், தனது ஒடுக்கப்பட்ட கிராமத்திற்கு உலகளவில் ஒரு அங்கீகாரத்தையும் பெருமையையும் தேடித்தர எப்படிப் போராடுகிறார்? அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன? என்பதே ‘பெத்தி’ திரைப்படத்தின் உணர்வுபூர்வமான கதையாக ஒரு மலைவாசி அதிகாரி பைஸ்வாலிடம் விவரித்து அந்த இடத்திற்கு கூட்டிச் செல்வது போல் கதைக்களம் விரிவடைகிறது. கதை 1990-களின் பின்னணியில், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய மலை கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மலை கிராமத்திற்கு அரசாங்க பதிவேடுகளில் எந்தவொரு அதிகாரப்பூர்வ ‘பெயரோ’ அல்லது முகவரியோ கிடையாது. சுற்றியுள்ள மக்கள் அதை மலைக்கு கீழே இருக்கும் கிராமம் என்றுதான் அழைக்கிறார்கள். முறையான சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர் என எதுவுமே இல்லாத, வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லாத அந்த நாடோடி கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் கிராமத்திற்கு ஒரு ரயில் நிலையத்தையாவது கொண்டு வந்து, அதற்கு அரசாங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் அப்பலசூரி (ஜெகபதி பாபு) 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடித் தோற்றுப் போய் நிற்கிறார்.இந்த கிராமத்தில் வாழும் பெத்தி (ராம் சரண்) ஒரு அசாத்தியமான திறமைகளைக் கொண்ட, முரட்டுத்தனமான ஒரு கிராமத்து இளைஞன்.

அவன் கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிடும் அளவுக்கு அசுர பலம் கொண்ட பேட்ஸ்மேன். ஆனால், அவன் நாட்டுக்காகவோ அல்லது சொந்தப் பெருமைக்காகவோ விளையாடவில்லை வறுமையின் காரணமாக எந்த உள்@ர் பிரமுகர் அதிகப் பணம் தருகிறாரோ, அவர்களுக்காக விளையாடும் ஒரு ‘ஆட்ட கூலி’ இவனை ராம்புஜ்ஜி (திவ்யேந்து சர்மா) என்ற உள்@ர் புள்ளியே பெரும்பாலும் ஏலம் எடுத்துத் தனது கிரிக்கெட் டீமிற்காகப் பயன்படுத்துகிறார். இதற்கிடையில், உள்@ர் அரசியல்வாதியின் மகளான அச்சியம்மா (ஜான்வி கபூர்) மீது பெத்திக்குக் காதல் மலர்கிறது. இவர்களது காதல் பகுதிகள் ஆரம்பத்தில் கமர்ஷியல் பாணியில் நகர்கின்றன. கிரிக்கெட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பெத்தியின் அசாத்தியமான உடல் பலத்தைக் கவனிக்கும் கூர்நாயுடு (சிவராஜ்குமார்), அவனுக்கு பாரம்பரிய மல்யுத்தத்தைக் கற்றுக்கொடுக்க முன்வருகிறார். குருவின் பேச்சைக் கேட்டு பெத்தி மல்யுத்தக் களத்தில் இறங்குவது, அவனது சொந்த கிராமத்து மக்களுக்கே பிடிக்காமல் போகிறது. இதனால் மக்களிடம் இருந்து அவன் சற்றே விலகுகிறான்.இருப்பினும், மல்யுத்தக் களத்தில் பெத்தி அசுர வளர்ச்சி அடைவதைப் பார்த்து, அதுவரை சாம்பியனாக இருந்த வீரபத்ரா (தாரக் பொன்னப்பா) பொறாமை கொள்கிறான். இறுதிப் போட்டியின் போது, வீரபத்ரா பெத்தியின் கால் நரம்புகளைக் கொடூரமாகத் தாக்கிச் சிதைக்கிறான். போட்டி முடிந்ததும், மருத்துவர்கள் ‘இனி பெத்தியால் சாதாரணமாக நடக்கவே முடியாது, அவனது கால்கள் செயலிழந்துவிட்டன” என்று கைவிடுகின்றனர்.தன் கால்கள் உடைந்த பின்னரே, பெத்திக்குத் தனது கிராமத்து மக்களின் நிலையும், அப்பலசூரியின் 30 ஆண்டு காலக் கனவும் புரிகிறது. ஒரு சாதாரணக் குடிமகனாகப் போராடினால் இந்த அரசாங்கம் தங்களுக்கு ஒரு ரயில் நிலையத்தைக் கூட தராது என்பதை உணர்கிறான்.தன் கிராமத்திற்கு ஒரு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக, பெத்தி தனது பாதிக்கப்பட்ட காலைத் தானே மிகவும் கொடூரமான முறையில் துண்டித்துக் கொள்கிறான்.பின்னர், செயற்கை கால் பிளேடு பொருத்திக்கொண்டு, உதிரம் சொட்டச் சொட்ட ஓட்டப்பந்தயத்திற்காகக் கடுமையான பயிற்சி எடுக்கிறான். இறுதியில், 1996-ஆம் ஆண்டு நடந்த பாரா ஏசியன் கேம்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஓடி தங்கம் வெல்கிறான்.தங்கம் வென்ற பிறகு அவனிடம் மைக் நீட்டப்படும்போது, “என்னை இந்தியன் என்று சொல்லாதீர்கள், நான் வாழும் கிராமத்திற்கு இந்திய வரைபடத்தில் ஒரு பெயர் கூட இல்லை” என்று ஒட்டுமொத்த சிஸ்டத்தின் முகத்திலும் அறையும்படி பேசுகிறான்.ஒரு சாதாரண மனிதனின் குரலுக்குச் செவிசாய்க்காத அரசாங்கம், தங்கம் வென்ற சாம்பியனின் குரலுக்குப் பணிந்து, அவனது கிராமத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி, ஒரு புதிய ரயில் நிலையத்தையும் அமைத்துக் கொடுக்கிறது. அந்த ஊர் மக்கள் அதற்குத் தங்களின் மூத்தவரான அப்பலசூரியின் நினைவாக “அப்பலவலசா” என்று பெயரிடுகிறார்கள். பெத்தி தனது இலட்சியத்தை அடைந்து, தன் மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதோடு படம் நிறைவடைகிறது.ராம் சரணின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். கிரிக்கெட், மல்யுத்தம் மற்றும் பாரா-ஸ்போர்ட்ஸ் என மூன்று முற்றிலும் மாறுபட்ட விளையாட்டுகளுக்காக அவர் மேற்கொண்டுள்ள அசாத்திய உடல் மாற்றம் மிரள வைக்கிறது. முதல் பாதியில் உள்@ர் அணிக்காக ஆடும் ஒரு முரட்டுத்தனமான ‘ஆட்ட கூலி” கிரிக்கெட்டராக மாஸ் காட்டும் ராம் சரண், இரண்டாம் பாதியில் கால்கள் செயலிழந்த பின், முற்றிலும் உடைந்து போகும் இடத்தில் நடிப்பில் சிகரம் தொட்டுள்ளார். குறிப்பாக, மருத்துவமனையில் நடக்கும் ஒரு உணர்வுபூர்வமான காட்சியில், தனது ஒட்டுமொத்த எமோஷனையும் கொட்டி பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்துள்ளார். படம் முழுக்க தனது அசாத்திய தோள்களில் தாங்கி, நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டி ஒரு சிறந்த நடிகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.கிராமத்தின் மூத்தவரான அப்பலசூரி கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு மிகக் கம்பீரமான மற்றும் நெகிழவைக்கும் நடிப்பை வழங்கியுள்ளார். தனது கிராமத்தின் அங்கீகாரத்திற்காக 30 வருடங்களாகப் போராடி, ஒவ்வொரு முறையும் தோற்கும்போது அவரது கண்களில் தெரியும் ஏமாற்றமும், இறுதியில் தன் உயிரை பணயம் வைக்கும் இடத்தில் படத்தின் மிக ஆழமான ஆன்மாவாக மாறியுள்ளது.

உள்@ர் அரசியல்வாதியின் மகளாக, எழில் கொஞ்சும் கிராமத்துப் பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். முதல் பாதியில் வரும் இவரது காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களைக் கவர்ந்தாலும், இரண்டாம் பாதியில் பெத்திக்கு உறுதுணையாக நிற்பது போல் சில காட்சிகளில் வந்து படம் முழுவதும் முக்கியத்துவம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.மிர்சாபூர்’ தொடரின் மூலம் பிரபலமான ‘முன்னா பையா’ திவ்யேந்து சர்மாவின் தெலுங்கு திரையுலக அறிமுகம் இது. பெத்தியை ஏலம் எடுத்துத் தனது கிரிக்கெட் அணிக்காகப் பயன்படுத்தும் ஒரு தந்திரமான உள்@ர் பிரமுகராக, தனது தனித்துவமான உடல்மொழியால் நெகட்டிவ் பாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பெத்திக்கு பாரம்பரிய மல்யுத்தத்தைக் கற்றுக்கொடுக்கும் குருவாக மிகக் குறுகிய காலமே வந்தாலும், திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தனது கம்பீரமான குரலாலும், நடிப்பாலும் தியேட்டரில் மாஸ் கைதட்டல்களைப் பெறுகிறார்.

பொமன் இராணி ஆரம்ப காட்சியில் கதையின் ஒட்டத்தை ஆரம்பித்து இறுதி வரை பயணிக்கும் அரசாங்க அதிகாரியாக வந்து அசத்தியுள்ளார்.

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் இசைதான் இப்படத்தின் மிகப்பெரிய தூண். வழக்கமான மாஸ் மசாலா படங்களில் இருந்து விலகி, மண்ணின் தன்மையைக் காட்டும் நாட்டுப்புற இசையையும், சர்வதேசப் போட்டிகளுக்கான பிரம்மாண்ட பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பும், கிளைமாக்ஸில் ராம் சரண் செயற்கைக் காலுடன் ஓடும்போது வரும் ‘மசா மசா’ போன்ற பாடல்களும், அதன் பின்னணி இசையும் தியேட்டரில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஆந்திராவின் கடலோர மற்றும் கிராமியப் பின்னணியை, அதன் அசல் தன்மையுடன் பழுப்பு மற்றும் பச்சை நிற டோன்களில் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தின் வேகம், மல்யுத்தக் களத்தின் புழுதி, மற்றும் ஓட்டப்பந்தயத்தின் விறுவிறுப்பு எனப் பல்வேறு விளையாட்டுக் காட்சிகளைத் தனது கேமரா கோணங்களால் பார்வையாளர்களையும் அந்த மைதானத்திற்குள் கொண்டு சேர்த்துள்ளார்.

படத்தொகுப்பு நவின் நூலி படத்தின் மொத்த ஓட்ட நேரம் 189 நிமிடங்கள் (3 மணி நேரம் 9 நிமிடங்கள்). முதல் பாதியில் சில தேவையற்ற காதல் மற்றும் கமர்ஷியல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் என்ற விமர்சனம் இருந்தாலும், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான பயிற்சியையும், கிளைமாக்ஸ் ஓட்டப்பந்தயத்தையும் தொய்வில்லாமல் மிகக் கச்சிதமாகத் தொகுத்துள்ளார்.

‘உப்பென்னா’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் புச்சி பாபு சனா கையில் எடுத்துள்ள இந்த பான்-இந்தியா விளையாட்டு நாடகம் அவரது எழுத்துத் திறமைக்குச் சான்று. முதல் பாதியில் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாக்களை (ஹீரோ இன்ட்ரோ, காதல் காட்சிகள்) சற்று நீளமாகக் கையாண்டிருந்தாலும், இடைவேளைக்கு முந்தைய காட்சியிலும், இரண்டாம் பாதியில் மாற்றுத்திறனாளி விளையாட்டுக் களத்தை எமோஷனலாக மாற்றிய இடத்திலும் இயக்குநராகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதையை விளையாட்டுடன் இணைத்த விதம் அற்புதம்.’பெத்தி’ திரைப்படம் ஒரு சாதாரண விளையாட்டுப் படமாக நின்றுவிடாமல், ராம் சரணின் அசுரத்தனமான அர்ப்பணிப்பாலும், ஏ. ஆர். ரஹ்மானின் ஆன்மார்த்தமான இசையாலும், புச்சி பாபு சனாவின் அழுத்தமான எமோஷனல் உணர்வாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.