Take a fresh look at your lifestyle.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) சினிமா விமர்சனம்:

15

செவன் ஸ்கீரின் ஸ்டியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் தி ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா தயாரித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (டுஐமு)படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.இதில் பிரதீப் ரங்கநாதன் – வைப் வஸ்ஸி , கிரித்தி ஷெட்டி – தீமா, சீமான் – அன்பு கடல், எஸ் ஜே சூர்யா – சூரியன், யோகி பாபு – ஜாலி பிரபு , கௌரி ஜி கிஷன் – கல்கி , ஷாரா – கபூர் கான் , ஆனந்தராஜ் – எச் ஏ சுப்பு, மாளவிகா- வாள மீன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவினர்கள்:-ஒளிப்பதிவு : ரவி வர்மன், தயாரிப்பு வடிவமைப்பு: முத்துராஜ் தங்கவேல், ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன், எடிட்டர்: பிரதீப் இ ராகவ், பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர்கள்: பிரவீன்ராஜா, ரினிபாந்த், ஜேகட்லீரிண்டியா மற்றும் ஷங்ரீஹ​hன் கே.எஸ்., ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி, அழகியகூதன் எஸ், நடனம்: ஜானி, பாபா பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சாண்டி, அனுஷா விஸ்வநாதன், சக்திவேல் மற்றும் சுரேன் ஆர்.,ஸ்டில்ஸ்: ஆகாஷ், விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா, கலை இயக்குனர்: கண்ணன் எஸ், ஒப்பனை: ரங்கநாதன் ராஜு, நிர்வாக தயாரிப்பாளர்: டிவ்ஸ் வேணுகோபால், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: குபேந்திரன் வி.கே, இணை தயாரிப்பாளர்: எல்.கே.விஷ்ணு குமார், மக்கள் தொடர்பு : யுவராஜ்

கதை 2040-ம் ஆண்டில் சென்னையில் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், மனித உணர்வுகளும் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றப்படுகின்றன. சூரியன் (எஸ்.ஜே. சூர்யா) ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் தாதா மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர். அவர் உலகிலேயே முதன்முறையாக ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி காதலர்களுக்கு ‘லவ் ஸ்கோர்’ வழங்கி, அவர்களின் உறவுக்குப் பாதுகாப்பு அளித்து ‘காதல் தோல்வியடைந்தால் கவலை வேண்டாம்; நீங்கள் இழந்த நேரத்தையும் பணத்தையும் நாங்கள் ஈடுகட்டுகிறோம்” என்பதுதான் அந்த நிறுவனத்தின் தாரக மந்திரம். அவரது உலகம் தரவுகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள், அல்காரிதம்கள் மற்றும் ஒப்பந்தங்களால் காதலை ஒரு ‘ஆர்கானிக்’ விஷயமாகப் பார்க்காமல், ஒரு ‘மெக்கானிக்கல்’ செயலாகப் பார்க்கிறார். இந்த புதிய ‘எல்ஐகே’ செயலிக்கு குரல் கொடுக்கும் பணியை செய்து பிரபலமாகிறார் வைப் வஸ்ஸி (பிரதீப் ரங்கநாதன்). இவரின் தந்தையான அன்புக்கடல் (சீமான்) இவருக்கு நேர்மாறானவர். ஒரு தீவிரமான ‘ஆர்கானிக்’ மனிதர் மற்றும் தொழில்நுட்பத்தை வெறுப்பவர், இயற்கை விவசாயம் மற்றும் பழைய காலத்து மனித உறவுகளை மதிப்பவர். சில நேரங்களில் தன் மகன் வைப் வஸ்ஸி நவீன தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடுவதை கண்டித்து திருத்த முயல்கிறார். எனினும் தந்தை அன்பு கடல் தன் மகனுடன் இணைந்து தொழில்நுட்பத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் ‘ஆர்கானிக் வேர்ல்ட்’ என்ற மையத்தை நடத்தி வருகிறார். தன் தந்தையின் வழிகாட்டுதலின்படி போன்களே இல்லாத உலகத்தை விரும்பும் வஸ்ஸி எதிர்பாராத விதமாக சமூக ஊடகங்களுக்கு அடிமையான தீமா (கிரித்தி ஷெட்டி) மீது காதல் கொள்கிறார்.

தீமா தனது துணையைத் தேர்ந்தெடுக்க ‘எல்ஐகே’ செயலியையே முழுமையாக நம்ப அதனால் வஸ்ஸி தனது கொள்கையைத் துறந்து, காதலிக்காக ‘எல்ஐகே’ செயலியைப் பயன்படுத்துகிறார். அங்குதான் கதை சூடுபிடிக்கிறது. வஸ்ஸி இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் மாட்டிக்கொள்கிறான். அவன் தீமாவை உண்மையாகக் காதலிக்கிறான் , ஆனால் அதே சமயம் அந்த காதலில் வரும் பயத்தைப் போக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகிறான். வஸ்ஸி இன்சூரன்ஸ் எடுத்தவுடன், சூரியன் தனது ‘ஆப்’ மூலம் வஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைகிறார். வஸ்ஸிக்கும் தீமாவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்களை அல்காரிதம் மூலம் ஆய்வு செய்து, அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கும் விதமாகத் தகவல்களைத் தருகிறார். காதலைச் சிதைக்கத் தனது ஆப் மூலம் பல சதித்திட்டங்களைத் தீட்டுகிறார். வஸ்ஸிக்கும் தீமாவிற்கும் இடையே தேவையில்லாத சந்தேகங்களை உருவாக்குவது, வஸ்ஸியின் பழைய தோழியான கல்கியை (கௌரி கிஷன்) இடையில் கொண்டு வருவது எனச் சூரியன் ஆடும் ஆட்டம் ஒரு கட்டத்தில் வஸ்ஸியை நிலைகுலையச் செய்கிறது.‘தொழில்நுட்பம் காதலைக் காப்பாற்றாது, மாறாக அதைக் கண்காணித்து சிதைக்கும்” என்பதும், தொழில்நுட்பம் தரும் தரவுகளை விட, மனித இதயம் பேசும் உண்மையான வார்த்தைகளே காதலைக் காப்பாற்றும் என்பது வஸ்ஸிக்குப் புரிகிறது. ஒரு பக்கம் தனது காதல், இன்னொரு பக்கம் சூரியனின் கார்ப்பரேட் சூழ்ச்சி என வஸ்ஸி மாட்டிக்கொள்கிறான். காதலை ஒரு தொழில்நுட்ப கணக்காகப் பார்க்கும் சூரியனின் மூளை ஜெயித்ததா? அல்லது காதலை உணர்வாகப் பார்க்கும் வஸ்ஸியின் இதயம் ஜெயித்ததா? சூரியனிpன் டிஜிட்டல் வலைகளை அறுத்துவிட்டு, வஸ்ஸி எப்படி தனது காதலை ‘ஆர்கானிக்’ முறையாக நேரடிப் பேச்சு மற்றும் நம்பிக்கை மூலம் மீட்டெடுத்தான் என்பதே கிளைமாக்ஸ்.

சூரியன் ‘எல்ஐகே’ நிறுவன உரிமையாளராக எஸ்.ஜே. சூர்யா.இப்படத்தின் உண்மையான ‘ஷோ-ஸ்டாப்பர்’ இவர்தான். காதலை ஒரு கார்ப்பரேட் வியாபாரமாகப் பார்க்கும் ஒரு குதர்க்கமான பிசினஸ்மேன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். தனது டிரேட்மார்க் உடல்மொழி மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களால் தியேட்டரை அதிர வைக்கிறார். ‘காதல் ஒரு ரிஸ்க், அதுக்கு இன்சூரன்ஸ் எடு” என்று அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் ஒருவித நக்கல் கலந்த வில்லத்தனம் தெறிக்கிறது. வில்லத்தனத்திற்கும் நகைச்சுவைக்கும் இடையே ஒரு மெல்லிய கோட்டில் பயணித்து, ஒரு ‘க்ரேஸி’ கார்ப்பரேட் ஓனராகப் படத்தின் எனர்ஜியைத் தக்கவைக்கிறார். இறுதி காட்சியில் தன்னுடைய அனுபவம் வாய்ந்த நடிப்பால் மிரள வைத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் வைப் வஸ்ஸியாக நவீன காலத்து இளைஞர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒருமுறை ஸ்கோர் செய்துள்ளார். தொழில்நுட்பத்திற்கும் காதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி இளைஞனின் பதற்றத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் அவஸ்தைகளும், கிரித்தி ஷெட்டியுடனான ரொமான்டிக் காட்சிகளும் பிரதீப்பின் பலம். தனது ‘வைப்’பான துள்ளலான மேனரிசங்களாலும், தடுமாற்றமில்லாத வசன உச்சரிப்பு, வளைந்து நெளிந்து ஒரு இடத்தில் நிற்காமல் அவர் செய்யும் குறும்புகள் என்று ஜென் ஜி ரசிகர்களை வசீகரிக்கிறார்.

அன்புக்கடல் என்ற கதாபாத்திரத்தில் தொழில்நுட்பத்தை வெறுக்கும் ஒரு ஆர்கானிக் மனிதராக, ஒரு கொள்கை பிடிப்பான தந்தையாக சீமான் கனமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது கணீரென்ற குரலில் நவீன காலக் காதலையும், அலைபேசி கலாச்சாரத்தையும் அவர் சாடும் இடங்கள் மிகவும் யதார்த்தமாகவும், சில இடங்களில் கைதட்டல் பெறுவதாகவும் உள்ளன. தனது மகளின் வாழ்க்கை பறிபோகும் தருணத்தில் அவர் காட்டும் உணர்ச்சிகளின் பரிதவிப்பு மற்றும் தன் மகன் ஒரு மெஷின் கையில் சிக்கக்கூடாது என்று அவர் காட்டும் அக்கறையில் ஒரு பாசமுள்ள தந்தை தெரிகிறார்.

கிரித்தி ஷெட்டி காதலி தீமாவாக அழகிலும் கவர்ச்சியிலும் வசீகரிக்கும் படத்தின் ‘கலர்ஃபுல்’ இன்ஃப்@யன்சர் நாயகியாக நடையிலும் உடையிலும் மனதை கவர்கிறார். பிரதீப்புடன் இணைந்து அவர் செய்யும் ரகளைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.தனது காதலனுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையே அவர் படும் மனப்போராட்டத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.

யோகி பாபு ஜாலி பிரபுவாக தனது ஒன்-லைனர்களால் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறார்.

கௌரி ஜி கிஷன் வஸ்ஸியின் தோழி கல்கியாக வரும் இவர், கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்க உதவுகிறார். மிகக் குறைந்த காட்சிகளே என்றாலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார்.

ஷாரா-கபூர் கான் ,ஆனந்தராஜ்-எச் ஏ சுப்பு, மாளவிகா- வாள மீன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்க்கவில்லை.

அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட். படத்தின் துடிப்புக்கு அனிருத்தின் இசைதான் முதுகெலும்பு. 2040-ஆம் ஆண்டின் சூழலுக்கு ஏற்ப, மிகவும் நவீனமான மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளைப் பயன்படுத்தி ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தந்துள்ளார். குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரதீப் மோதிக்கொள்ளும் காட்சிகளில் பின்னணி இசை தியேட்டரை அதிர வைக்கிறது.

இந்தியத் திரையுலகின் டாப் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி வர்மன், இப்படத்தை ஒரு சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளார்.எதிர்காலச் சென்னையை மிகவும் பளிச்சென்ற வண்ணங்களில் காட்டியுள்ளார். ஒவ்வொரு பிரேமும் ஒரு பெயிண்டிங் போல மிக அழகாகவும், அதே சமயம் நவீன தொழில்நுட்பம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கிறது.

‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ஈ. ராகவ், இப்படத்தின் விறுவிறுப்பைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். நவீன காலத்து ‘ஸ்பீட்’டிற்கு ஏற்ப, துரிதமான கட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளைத் தடையின்றி இணைத்து, பார்வையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.

கண்ணன் எஸ் கலை இயக்கம் 2040-ல் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி எப்படி இருக்கும், அந்த காலத்து வீடுகள் மற்றும் தெருக்கள் எப்படி மாறும் என்பதை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். நவீன கேட்ஜெட்கள் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சார்ந்த வடிவமைப்புகள் படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் மற்றும் நயன்தாரா இணைந்து இப்படத்திற்குத் தேவையான பிரம்மாண்டத்தை வழங்கியுள்ளனர். படத்தின் தரத்திலும், பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளிலும் எங்கும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.

2040-ல் காதல் எப்படி இருக்கும் என்ற ‘ஃபியூச்சரிஸ்டிக்’ கற்பனையை, ஒரு சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் ஜாலியாகத் திரைக்கதை அமைத்துள்ளார். காதலை ஒரு கார்ப்பரேட் வியாபாரமாகப் பார்க்கும் முதலாளிக்கும் உணர்வுகளாகப் பார்க்கும் ஒரு நடுத்தர இளைஞனுக்கும்; இடையிலான மோதலை, தனது டிரேட்மார்க் நகைச்சுவை மற்றும் வண்ணமயமான காட்சிகளுடன் கையாண்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இன்றைய காலக்கட்டத்தில் காதலில் இருக்கும் பாதுகாப்பின்மையையும், அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் மிகவும் ஜாலியான ஒரு நவீன காலத்து கதையாகச் சொல்லியிருக்கிறார். ‘தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்கலாம், ஆனால் ஒருபோதும் இதயத்தின் உணர்வுகளுக்குப் பதிலாக முடியாது” என்ற கருத்தை நகைச்சுவையுடன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.காதல் கலாட்டா.